அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர், தங்கம்மாபட்டி - 624801, திண்டுக்கல் .
Arulmigu Vandikarruppansamy Temple, Ayalur, Thangamapatty - 624801, Dindigul District [TM032197]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு வண்டி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலானது திண்டுக்கல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கிழக்கே சுமார் 30 கிமீட்டர் தொலைவில் தங்கம்மா பட்டி என்றும் இடத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் திறந்தவெளியில் நான்கு புறமும் சுற்று சுவர் கட்டப்பட்டு மையத்தில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி வீற்றுள்ளார் கிழக்கு பார்த்த இக்கோயிலில் கருப்பண்ண சுவாமி சன்னதிக்கு இருபுறமும் சுதையால் ஆன இரு குதிரைகள் இரண்டு உள்ளன இந்த குதிரைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி புதிய குதிரைகள் வைக்கப்படும் இத்திருக்கோயிலில் தென்மேற்கில் ஆர்.சி.சி ஆளான மண்டபம் உள்ளது. இதில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் உணவு உண்ணவும் உபயோகித்து வருகின்றனர்.
இத்திருக்கோயில் ஊர் பொது மக்களால் உருவாக்கப்பட்டது என செவி வழி செய்தி கூறுகிறது. இத்திருக்கோயில்...அருள்மிகு வண்டி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலானது திண்டுக்கல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கிழக்கே சுமார் 30 கிமீட்டர் தொலைவில் தங்கம்மா பட்டி என்றும் இடத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் திறந்தவெளியில் நான்கு புறமும் சுற்று சுவர் கட்டப்பட்டு மையத்தில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி வீற்றுள்ளார் கிழக்கு பார்த்த இக்கோயிலில் கருப்பண்ண சுவாமி சன்னதிக்கு இருபுறமும் சுதையால் ஆன இரு குதிரைகள் இரண்டு உள்ளன இந்த குதிரைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி புதிய குதிரைகள் வைக்கப்படும் இத்திருக்கோயிலில் தென்மேற்கில் ஆர்.சி.சி ஆளான மண்டபம் உள்ளது. இதில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் உணவு உண்ணவும் உபயோகித்து வருகின்றனர்.
இத்திருக்கோயில் ஊர் பொது மக்களால் உருவாக்கப்பட்டது என செவி வழி செய்தி கூறுகிறது. இத்திருக்கோயில் தெய்வம் அருள்மிகு கருப்பண்ண சுவாமி வண்டி வாகனங்களை பாதுகாத்து வருவதால் வண்டி கருப்பண்ண சுவாமி என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் எந்தவித ஆபத்தும் இன்றி தங்கள் ஊர் போய் சேர்வதற்கு இத்திருக் கோயிலின் முன்பாக தங்கள் வண்டி வாகனங்களை நிறுத்தி கருப்பண்ண சுவாமிக்கு தேங்காய் பழம் சூடம் வைத்து கும்பிட்டு விட்டு பிறகு தங்கள் வண்டியை ஓட்டிச் செல்கின்றனர். வண்டியில் இருந்து கொண்டே பக்தர்கள் காணிக்கையாக காசுகளை வீசி செல்லும் வழக்கமும் இருந்து வருகிறது புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து பூஜை செய்த பின்புதான் வாகனங்களை பயன்படுத்தும் வழக்கம் இப்பகுதியில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்சம் சுமார் 10 ஆடுகள் பலி கொடுத்து சமைத்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.
இத்திருக்கோயில் ஆடி மாதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குதிரை எடுப்பு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தைமாத பிறப்பன்று இத்திருக்கோயிலை கடந்து செல்லும் வாகனங்களுக்கு இத்திருக்கோயிலில் இருந்து மாலை அணிவித்து சிறப்பித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது இத்திருக்கோயிலின் செயல் அலுவலராக வடமதுரை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் இருந்து வருகிறார்.
இங்கு வரும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது இங்கே பக்தர்கள் வந்து தரிசனம் செய்து ஓய்வெடுக்க திருக்கோயிலுக்கு வெளியே இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரங்கள் நிறைந்த இயற்கை சூழலில் திருக்கோவில் அமைந்துள்ளது இங்கு வரும் பக்தர்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அதன் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.