அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயில், பாறைவலசு - 624619, திண்டுக்கல் .
Arulmigu Goundappar Temple, Paraivalasu - 624619, Dindigul District [TM032247]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு கவுண்டப்பர் திருகோயில் பாறைவலசு, பாலப்பன்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம்.
திண்டுக்ககல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பாலப்பன்பட்டி கிராமம், பாறைவலசு என்ற சிற்றூரில் உள்ள அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயிலானது பழநியிலிருந்து தாராபுரம் வட்டம் பகவான் திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவிலும்,ஒட்டன்சத்திரம் தாராபுரம் நெடுஞ்சாலையில் 30 கி.மீ தொலைவிலும், அப்பியம்பட்டி நால்ரோடு பிரிவிலிருந்து பழநி செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவிலும் அமையப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டப்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் கேரளாவில் தான் கற்ற விஷஜந்துக்கள் தொடர்பான மாந்திரீகத்தின் மூலம் விஷஜந்துக்களிடமிருந்து அவ்வூர் மக்களை காத்து வந்தனர். இந்நிலையி கவுண்டட்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் சமாதியடைந்தை அடுத்து மக்கள் அவர்களை தெய்வாக...அருள்மிகு கவுண்டப்பர் திருகோயில் பாறைவலசு, பாலப்பன்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம்.
திண்டுக்ககல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பாலப்பன்பட்டி கிராமம், பாறைவலசு என்ற சிற்றூரில் உள்ள அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயிலானது பழநியிலிருந்து தாராபுரம் வட்டம் பகவான் திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவிலும்,ஒட்டன்சத்திரம் தாராபுரம் நெடுஞ்சாலையில் 30 கி.மீ தொலைவிலும், அப்பியம்பட்டி நால்ரோடு பிரிவிலிருந்து பழநி செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவிலும் அமையப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டப்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் கேரளாவில் தான் கற்ற விஷஜந்துக்கள் தொடர்பான மாந்திரீகத்தின் மூலம் விஷஜந்துக்களிடமிருந்து அவ்வூர் மக்களை காத்து வந்தனர். இந்நிலையி கவுண்டட்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் சமாதியடைந்தை அடுத்து மக்கள் அவர்களை தெய்வாக வழிபட ஆரம்பித்தனர். அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயில் என்ற பெயரிலேயே மக்களால் இத்திருக்கோயில் அறியப்படுகிறது. கவுண்டப்பர் தன்னை நாடிவரும் பக்தர்களையும் அவர்களது வீட்டு விலங்குகளையும் விஷஜந்துக்களிடமிருந்து காப்பதுடன், தங்களது வீடு, தெழுவம் மற்றும் தோட்டம் ஆகியவற்றிற்குள் விஷஜந்துக்கள் வராமல் காத்து அருள்வதால் அவரை வழிபாடு செய்ய பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வர துவங்கினர்.
வழிபாட்டு முறை மற்றும் பலன்கள்
அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயிலுக்கு சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை சுவாமியை வழிபாடு செய்ய பக்தர்கள் வருகின்றனர். இதில் அக்னி நட்சத்திர திருவிழாவானது பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழாவின்போது கிராமபுறங்களில் காட்டில், தோட்டத்தில் வீடுகட்டி வசித்து வரும் சிறு விசாயிகள் பாம்பு, தேள், பல்லி மற்றும் பூரான் ஆகிய விஷஜந்துக்களிடமிருந்து தங்களை காத்திடும் வகையில் அருள்மிகு கவுண்டப்பருக்கு பொங்கல் நெய்வேத்தியம் படைத்தும், அருள்மிகு பேச்சியம்மன் மற்றும் இதர வழிபாட்டு தெய்வங்களுக்கு ஆடு மற்றும் கோழியை பலியிட்டு தங்கள் நேர்திக்கடனை செலுத்துகின்றனர். சுவாமி தரிசனம் செய்து, விபூதியை பிரசாதமாக பெற்றுக்கொள்கின்றனர். அப்பிரசாதத்தினை தங்கள் வசிப்பிடத்தை சுற்றி தூவுவதால் விஷஜந்துக்கள் தங்கள் குடும்பத்தையும், வீட்டு விலங்குகளையும் அண்டாமல் பாதுகப்பதாக நம்புகின்றனர்.
வரலாறு
இத்திருக்கோயில் அருகில் அன்றைய காலகட்டத்தில் கவுண்டர் சமுதாத்தை சேர்ந்தவர்களும், மற்ற இன விவசாயிகளும் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. அத்தருணத்தில் வாழ்ந்த கவுண்டப்பர் மற்றும் கம்பளத்து நாயக்கர் வம்சத்தை சேர்ந்த அவரது நண்பர் சின்னு ஆகிய இருவரது குடும்பமும் பிழைப்பை தேடி கேரள தேசம் சென்றனர். அங்கு வாழ்ந்த காலத்தில் விஷஜந்துக்கள் தொடர்பான மாந்தீரிகத்தை கற்றுக்கொண்டு பிறகு சில பிரச்சனை காரணமாக கவுண்டப்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் தன் சொந்த ஊரான பாறைவலசிற்கு வரும் வழியில், ஐவர் மலை என்ற இடத்தில் ஆட்சி புரிந்த சிற்றரசருடன் ஆங்கிலேயர்கள் போர்புரிந்தனர். அப்போரின் ஆங்கிலேய சிப்பாய்கள் அவ்வூர் பொதுமக்களை அடித்து துன்புறுத்தியதால் கவுண்டப்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் பொது மக்களை காப்பாற்றுவதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டனர். இப்போரில் ஆங்கிலேய சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதால் கவுண்டப்பருக்கு வலது தோளில் காயம் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று விடுகிறார். மயக்க நிலைக்கு சென்ற கவுண்டப்பரை அவரது நன்பரான சின்னு என்பவர் எழுப்பி சுயநினைவிற்கு கொண்டு வருகிறார். பின்பு இருவரும் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு அவர்களை கொன்று அழித்துவிட்டு தனது சொந்த ஊரான பாறைவலசிற்கு வருகின்றனர். விஷஜந்துகளல் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்களை இவ்விருவரும் தான் கற்றறிந்த மாந்தீரிகத்தின் வாயிலாக பாதுகாத்தனர். இந்நிலையில் இவ்விருவரும் திருக்கோயிலுள்ள இடத்தில் சமாதி அடைந்தனர். அதனபின் மக்கள் அனைவரும் தெய்வமாக கவுண்டப்பரை வணங்கி வருகின்றனர். ஆங்கிலேயர் கவுண்டப்பரை வலது தோளில் சுட்டதற்கான அடையாளமாக கவுண்டப்பர் சிலையில் வலது தோள் சற்று இறங்கி காணப்படுகிறது என்பது வரலாற்று உண்மை. பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருடத்தில் ஒரு நாள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்த தவறும்பட்சத்தில் தங்களுக்கு கவுண்டப்பர் பாம்பு உருவத்தில் வந்து காட்சியளிப்பதாக இன்றளவும் பக்தர்கள் கூறுவதுண்டு. மேலும் திருக்கோயிலுக்கு உட்புறம் மற்றும் அதனை சுற்றியும் அவ்வப்போது பாம்பு செல்வதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்.