அருள்மிகு அகோபில நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், நிலக்கோட்டை - 624208, திண்டுக்கல் .
Arulmigu Agobhila Narasingaperumal Temple, Nilakottai - 624208, Dindigul District [TM032270]
×
Temple History
தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகர் மற்றும் வட்டம் அருள்மிகு அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோயில் நிலக்கோட்டையில் ஊரின் மையப் பகுதியில் மதுரையிலிருந்து மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டுக்கலிலிருந்து தெற்காக 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
நிலக்கோட்டையை மையமாக வைத்து கூலப்ப நாயக்கர் ஜமீன்தாரர்கள் வம்சா வழியாக ஆண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவாரான சிவப்பு கூலப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில் கி.பி1696ல் அருள்மிகு அகோபில நரசிம்மப் பெருமாள் திருக்கோயிலைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அகோபிலம் என்பது மத்திய ஆந்திர மாகாணத்தில் வசிக்கும் ஒரு பிரிவினர் அங்கிருந்து இடம்...திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகர் மற்றும் வட்டம் அருள்மிகு அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோயில் நிலக்கோட்டையில் ஊரின் மையப் பகுதியில் மதுரையிலிருந்து மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டுக்கலிலிருந்து தெற்காக 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
நிலக்கோட்டையை மையமாக வைத்து கூலப்ப நாயக்கர் ஜமீன்தாரர்கள் வம்சா வழியாக ஆண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவாரான சிவப்பு கூலப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில் கி.பி1696ல் அருள்மிகு அகோபில நரசிம்மப் பெருமாள் திருக்கோயிலைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அகோபிலம் என்பது மத்திய ஆந்திர மாகாணத்தில் வசிக்கும் ஒரு பிரிவினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து இங்கு ஆட்சி நடத்தியதால் அவர்களின் பன்பாட்டின் அடிப்படையில் இத்திருத்தலத்தை அகோபிலம் என ஸ்தாபித்துள்ளார்கள் உண்மையாகும்.
இத்திருக்கோயிலின் கருவறையில் மூலவர் அருள்மிகு நரசிம்மபெருமாள் உபய நாச்சியார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி, கல் விக்கிரகங்கள் உள்ளது. சுவாமி சன்னதியின் வலப்புறமாக கமலவள்ளி தாயார் சன்னதி தனியாக அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் கன்னி மூலையில் விநாயகர் சன்னதி அதனை அடுத்து சிவலிங்கம் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. கர்ப்பகிரகத்தின் எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளது.
இத்திருக்கோயிலின் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா அதிவிமர்சையாக நடைபெறுகிறது. மேற்படி திருவிழாவில் சொர்க்க வாசம் திறக்கப்பட்டு அதிகாலையில் சுவாமி புறப்பாடும், மிக சிறப்பாக நடைபெறுகிறது. அதுசமயம் இவ்வூரில் உள்ள மக்கள் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக வந்திருந்து எம்பெருமானை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதுதவிர கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனி வாரங்கள், கார்த்திகை சொக்கப்பனை ஆகிய மாதாந்திர திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது.