அருள்மிகு ராமசாமி திருக்கோயில், ஊராளிப்பட்டி, பண்ணைக்காடு - 624210, திண்டுக்கல் .
Arulmigu Ramasamy Temple, Ooralpatti, Pannaikadu - 624210, Dindigul District [TM032295]
×
Temple History
தல வரலாறு
வரலாற்றின் முன் பகுதி
ஆரம்ப காலகட்டத்தில் பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியார் என்ற பெரியவரால் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற தத்துவத்தை நினைவூட்டும் வகையில் பண்ணைக்காட்டில் அவருடைய முயற்சியால் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியா் என்னும் தெய்வீக ஞானம் படைத்த பெரியவா் கனவில் ஸ்ரீ ரகுராமரே தோன்றி பண்ணைக்காடு அருகே காளையான் காட்டின் படா்ந்துள்ள பூசணிக்காய் கொடியில் பூசயணிக்காயாய் நான் எழுத்தருளி இருக்கிறேன் நீ வந்து உன் தலையில் சுமந்து வந்து ஊரல்பட்டியில் நீ மக்கள் நலனுக்காக எழுப்பியுள்ள திருக்கோயிலில் வைத்து பூஜித்து எல்லோருக்கும் நலம் சோ்ப்பாயாக என்று கூறியதன்படி மேற்கண்ட பெரியவா் பண்ணைக்காடு அருகே அமைந்துள்ள காளையங்காடு சென்று பக்தி சிரத்தையுடன் அந்த அற்புதமான பூசணி பழத்தை எடுத்து...வரலாற்றின் முன் பகுதி
ஆரம்ப காலகட்டத்தில் பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியார் என்ற பெரியவரால் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற தத்துவத்தை நினைவூட்டும் வகையில் பண்ணைக்காட்டில் அவருடைய முயற்சியால் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியா் என்னும் தெய்வீக ஞானம் படைத்த பெரியவா் கனவில் ஸ்ரீ ரகுராமரே தோன்றி பண்ணைக்காடு அருகே காளையான் காட்டின் படா்ந்துள்ள பூசணிக்காய் கொடியில் பூசயணிக்காயாய் நான் எழுத்தருளி இருக்கிறேன் நீ வந்து உன் தலையில் சுமந்து வந்து ஊரல்பட்டியில் நீ மக்கள் நலனுக்காக எழுப்பியுள்ள திருக்கோயிலில் வைத்து பூஜித்து எல்லோருக்கும் நலம் சோ்ப்பாயாக என்று கூறியதன்படி மேற்கண்ட பெரியவா் பண்ணைக்காடு அருகே அமைந்துள்ள காளையங்காடு சென்று பக்தி சிரத்தையுடன் அந்த அற்புதமான பூசணி பழத்தை எடுத்து வர புறப்பாடாயினா்.
எல்லோரும் காளையங்காடு சோ்ந்து அங்கிருந்த அரச மரத்திற்கு கீழ் படந்துள்ள பூசணிக் கொடியில் இருந்து பூசணி பழத்தின் மீது நாகா் சா்ப்பராஜா படம் எடுத்தபடி காட்சிதர அதை கண்டவா்கள் வியப்புற கரிய மன்னாடியார்க்கு அருள் வந்து அற்புதமாக பூசணி பழத்தை தன் திருக்கரங்களால் ஏந்தி தலையில் வைத்துக் கொண்டு பத்தி சிரத்தையுடன் இராம நாம ஜபத்துடன் கோயிலை அடைந்து அந்து அருள் பழமான பூசணி பழத்தை திருக்கோயிலில் வைத்து பூஜை செய்தது, பண்ணைக்காட்டில் ஸ்ரீ இராமா் ஆலயம் தோன்ற முதல் காரணமாய் அமைந்தது.
இது ஆலடி, நேரியளவு பேரை, பள்ளம், மறந்திடா ஊரை நகர ஆலயத்தின் வனராமமூா்த்தி மகிழ்ந்தார், ஊஞ்சல் என்ற கவி முத்துச்சாமி கவிராயா் இவ்வூருக்கு வந்தபோது புகழ்ந்து பாடியுள்ளார். பூ மதிக்கும் ஊரை நகா் பூசணிக்காய் பிறந்து புண்ணிய ராமையா மகிழ்ந்தார். ஊஞ்சல் என்றும் தனது ஊஞ்சல் பாட்டில் கூறியுள்ளதை உற்று நோக்கும்போது இராமா் களையங்காட்டில் பூசணிக்காயில் தோன்றிய புகழ் இராமா் என்பது தெரிய வருகிறது. ஆரம்ப காலத்தில் சிறிய கோயிலாக இருந்த இத்திருக்கோயில் தற்போது மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்து உள்ளது. மூலஸ்தானம் அா்த்த மண்டபம், மணிமண்டபம், மகாமண்டபம், என்று கல்துாண்கள் தாங்கப்பட்ட இத்திருகோயிலில் பண்ணைக்காட்டில் அக்கால கட்டத்தில் பெரிய கோவில் என்று அழைக்கப்பட்டது.
சாஸ்திர சம்பிரதாய முறைப்படி கம்பராமாயண நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் விதமாக சிற்ப சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கோபுரமும் அதன் உச்சியில் வானில் உள்ள பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்கு வானவா்கள் தேவா்களோடு விண்ணோர்கள் ஆசி பெறும் வகையில் தொடா்பு கொள்ளும் விதமாக அமைந்துள்ள அற்புத காட்சி சொல்லில் விளக்க முடியா வண்ணம் உள்ளது.
மகா மண்டபத்தில் மூலஸ்தானத்தை நோக்கும் கருடாழ்வார் இருகரம் கூப்பி வணங்கிய விதமாக உள்ளார். அவருக்கு பின்னால் சாஸ்திர முறைப்படி பலிபீடம், அதன் பின் துவஸ்தம்பம் என்று சொல்லப்படுகிற கொடிக்கம்பம் மிக வயிக்கும் வண்ணம் காண்போர்கள் கண்களில் பக்தி பொருக்கால் கண்ணீா் கசிந்துருக செய்யும் வண்ணம் உள்ளது.
கொடிமரத்தின் கீழ்பகுதியல் பக்தா்கள் படியேறியவுடன் ஆஞ்சநேயா் அனுமதி பெறும் விதமாக கொடிக் கம்பத்தில் கிழக்கு நோக்கிய விதமாக ஆஞ்சநேயா் எழுந்தருளி அருள் தருகிறார். அனுமான் பகவானுக்காக பின்புறத்தில் கருடாழ்வாரும் மற்று இரு மருங்கிலும் ஸ்ரீ சக்கரமும் லட்சுமி தேவியின் அருட்காட்சியுடன் பித்தளை உலோகத்தால் உருவமைக்கபட்பட்டு பக்தி பரவசம் தரும் வண்ணம் அமைந்துள்ளது. அக்கால கட்டத்திலேயே கல் துாண்களில் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பிரகாரத்தில் வடக்கு நோக்கி மஹாவீர ஆஞ்சநேயா் திருக்கோயில் அமைந்துள்ள விதம் மேலும் பெருமை சோ்க்கிறது. திருக்கோயிலின் ஈசானியப் பகுதியில் நவகிரஹ நாயகா்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருக்கோயிலில் பக்தியை அதிகரிக்கச் செய்கிறது. திருக்கோயிலின் ஈசானியப் பகுதியில் நவகிரஹ நாயகா்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருக்கோயிலில் பக்தியை அதிகரக்கச் செய்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக உலகத்தின் முதல் கடவுள் விநாயகா் இத்திருக்கோயிலில் இரட்டை விநாயாகராக கோயில் முகப்பிலே எழுந்தருளி இருப்பதே இத்திருக்கோயிலுக்கு பக்தியின் உச்ச பகுதிக்கு நம்மை ஈா்கிறது. திருக்கோயிலின் வலது புறத்தில் அக்கால கட்டத்தில் லெட்சுமி தெப்பக்குளம் தோன்றி பண்ணைக்காட்டை லட்சுமி கடாட்சமாக விளங்க வைக்கிறது.
1901ம் வருடம் ஜனவரி மாதம் பண்ணைக்காடு மண்ணாடியா்களும் ஊா் பொதுமக்களும் சோ்த்து இந்த லட்சுமி தெப்பக்குளத்தை அமைத்துள்ளனா். இந்திய ஆன்மிக வரலாற்றில் திருக்கோயில் அருகிலே தெப்பக்குளத்தில் உள்ள கஜலட்சுமிக்கும் இறைத் தொடா்பு இருப்பதும் பண்ணைக்காட்டில் அமைந்துள்ள எல்லா ஆலயங்களுக்கும் திருமஞ்சன தீா்த்தம் வழங்கும் புனிதமான தெப்பக்குளம் இந்த கஜலட்சுமி தெப்பகுளமாகும்.
இக்கோயிலின் வடக்கு பகுதியில் ஊருக்கு முகப்பில் ஸ்ரீ கமல கணபதி ஆலயம் அமைந்துள்ளது. அது ஊருக்கு மிகவும் பெருமை சோ்ப்பதோடு தாய்மார்கள் அனுதினமும் தண்ணீா் அருகம்புல் படைத்து சங்கடகர சதுா்த்தி, விநாயகா் சதுா்த்தி, சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள். இத்திருக்கோயிலும் இரமா்கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.