அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601, தேனி .
Arulmigu Balasubramaniyaswamy Temple, Thenkarai, Periyakulam - 625601, Theni District [TM032296]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் பாண்டிய நாட்டில் சோழ மன்னனான இஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருங்கோயிலாகும், அவ்வகையில் இறைவனின் திருநாமம் இராஜேந்திர சோழீஸ்வரர் எனப் பெயர் பெற்றது, அம்பாள் பெயர் அறம் வளர்த்த நாயகி ஆகும், இத்திருத்தலம் கட்டிட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றது, எந்தத் திருக்கோயிலிலும் இல்லாதபடி சுவாமி அம்பாள் பாலசுப்பிரமணியர் ஆகிய முன்று கொடிமரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன, பாண்டியர் காலத்தில் ஆரம்பித்து சோழர் காலத்தில் கட்டப்பெற்று நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது, திருவிளையாடற்புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலமாகும், இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள் சுப்பிரமணியன் சன்னதியில் வடவமைக்கப்பட்டுள்ளன, இத்திருக்கோயிலில் தென்வடல் அடியும் கிழமேல் ௨௨௨ அடியும் உள்ளது, இப்பெருங்கோயிலில் அதிகாரநந்தி சன்னதி தொடங்கி சண்டிகேஸ்வரர் சன்னதி...இத்திருக்கோயில் பாண்டிய நாட்டில் சோழ மன்னனான இஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருங்கோயிலாகும், அவ்வகையில் இறைவனின் திருநாமம் இராஜேந்திர சோழீஸ்வரர் எனப் பெயர் பெற்றது, அம்பாள் பெயர் அறம் வளர்த்த நாயகி ஆகும், இத்திருத்தலம் கட்டிட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றது, எந்தத் திருக்கோயிலிலும் இல்லாதபடி சுவாமி அம்பாள் பாலசுப்பிரமணியர் ஆகிய முன்று கொடிமரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன, பாண்டியர் காலத்தில் ஆரம்பித்து சோழர் காலத்தில் கட்டப்பெற்று நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது, திருவிளையாடற்புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலமாகும், இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள் சுப்பிரமணியன் சன்னதியில் வடவமைக்கப்பட்டுள்ளன, இத்திருக்கோயிலில் தென்வடல் அடியும் கிழமேல் ௨௨௨ அடியும் உள்ளது, இப்பெருங்கோயிலில் அதிகாரநந்தி சன்னதி தொடங்கி சண்டிகேஸ்வரர் சன்னதி ஈறாக ௨௭ சன்னதிகளும் மண்டபங்களும் எழுப்பப்பட்டுள்ளன, நோய் தீர்க்கும் பெருமகனார் ஜீரதேவரின் அரிய சிற்பம் காண்பவர் கருத்தை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, பிணி நீங்க வேண்ட பிரார்த்திப்பவர்களுக்கு நாளும் நல்லருள் புரிந்து வருகிறார். ஆயுள் விருத்தி அளிக்கும் மிருத்யுஞ்சயரின் அரிய சிற்பமும் இதன் அருகில் அமைந்திருப்பதும் திருக்கடையூர்க்கு அடுத்ததாக அறுபதுக்கு அறுபது விழா இங்கு நடத்தப்பெறுவது மிகச்சிறப்பாகும். வெளி மண்டபத்தின் எழுந்தருளியிருக்கும் ருத்ரதாண்டவ முர்த்தியின் சிலை நாயக்கர் கால கலைப் பெட்டகமாக திகழ்கிறது. நெட துயர்ந்து நிற்கும் துர்க்கையின் தோற்றம், ருத்ர தாண்டவர் தோற்றம் மன்மதன் ஆகிய சிற்பங்கள் தமிழக சிற்ப கலையின் மேன்மையை பறைசாற்றும் பாங்குடன் அமையப்பெற்றுள்ளது, இவ்வாலயத்தின் தலவிருட்சம் நெய்கொட்லாண் மரம் அணிகலன் செய்வோர்க்கு அருமருந்தாக இம்மரத்தின் காய்கள் உள்ளன என்பது தனிச்சிறப்பாகும், விழிக்குத்துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் என தமிழ்க்கடவுள் முருகனின் பெருமையை தீந்தமிழில் பாட மகிழ்ந்த அருணகிரியார், தரங்கவார் குழல் நறுநுதல் விழியாலே தகைந்த மாலைத் துடயிடை மடமாதர் பரந்த மாலிகுட் படுகுழி வசமாகிப் பயந்து காலனுக்குயிர் கொடு தவியாமல் வரந்தராவிடற் விறரெவர் தருவாரே, மகிழ்ந்து தோகையிற் வலிவுலம் வடுவானோ குரும்பை மாமுலைக் குறமகள் மணவாளா குளந்தை மாநகர் தனியுறை பெருமானே, என்று குளந்தை மாநகர் முருகப் பெருமானை நெக்குருகப் பாடயுள்ள இத்தலம் வேண்டும் வரந்தரும் பெருந்தலமாகும். இத்திருக்கோயில் மதுரையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் தேனியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.