அருள்மிகு இலந்தை முத்து மாரியம்மன் கைலாசநாதர் திருக்கோயில், கொண்டித்தோப்பு, சென்னை - 600079, சென்னை .
Arulmigu Elanthai Muthu Mari Amman Temple, Kondithoppu, Chennai - 600079, Chennai District [TM000324]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு இலந்தை முத்து மாரியம்மன் திருக்கோயில்
ஸ்தல வரலாறு
சென்னை கொண்டியம்பதியில் முத்துக் கிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு இலந்தை முத்து மாரியம்மன் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை யான திருத்தலம் ஆகும். தொண்டை மண்டலத்தில் ஏழு ஆரண்யங்கள் காடுகள் இருப்பதும் தொன்று தொட்டு வரும் ஐதீகம் திருவேற்காடு தர்ப்பைக் காடு திருநள்ளாறு இலந்தைக்காடு பத்திரி ஆரண்யம் போன்றவை சிலவாகும் இலந்தை மரங்கள் சூழ்ந்த தோப்பாக கொண்டித்தோப்பு பழங்காலத்தில் இருந்த போது, அதன் எல்லையில் கோயில் கொண்டு விளங்கிய முத்து மாரியம்மன் பின்னாளில் இலந்தை முத்து மாரியம்மன் என்று திருநாமம் வழங்கப்பட்டு வருகிறது
மூலஸ்தான அம்மனின்...அருள்மிகு இலந்தை முத்து மாரியம்மன் திருக்கோயில்
ஸ்தல வரலாறு
சென்னை கொண்டியம்பதியில் முத்துக் கிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு இலந்தை முத்து மாரியம்மன் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை யான திருத்தலம் ஆகும். தொண்டை மண்டலத்தில் ஏழு ஆரண்யங்கள் காடுகள் இருப்பதும் தொன்று தொட்டு வரும் ஐதீகம் திருவேற்காடு தர்ப்பைக் காடு திருநள்ளாறு இலந்தைக்காடு பத்திரி ஆரண்யம் போன்றவை சிலவாகும் இலந்தை மரங்கள் சூழ்ந்த தோப்பாக கொண்டித்தோப்பு பழங்காலத்தில் இருந்த போது, அதன் எல்லையில் கோயில் கொண்டு விளங்கிய முத்து மாரியம்மன் பின்னாளில் இலந்தை முத்து மாரியம்மன் என்று திருநாமம் வழங்கப்பட்டு வருகிறது
மூலஸ்தான அம்மனின் தலைக்கு மேல் சர்ப்பமானது பாம்பு வழக்கமாகக் காணப்படும் ஐந்து தலைகளுக்குப் பதிலாக மூன்று தலை பாம்பு சிற்பம் விளங்குவது விசேஷமாகும்
அம்பாளின் மூன்றாவது மகனாகப் பரசுராமன் அவதரித்ததாக ஐதீகம் இருப்பதால் மூலஸ்தானத்திற்கு நேர் எதிரில் பரசுராமன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
பிரார்த்தனை ஸ்தலம்
பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றல் வேப்பஞ்சேலை அணிதல், கோழி சுற்றி போடுதல் பிரதிமை உரு காணிக்கை செலுத்துதல் ஆகிய பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன வேண்டியவர்க்கு வேண்டுவன வழங்கும் அருளாற்றல் நிக்க ஸ்தலமாகும்