Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் திருக்கோயில், Idaikattur - 630602, சிவகங்கை .
Arulmigu Alimanikandeswarar Temple, Idaikattur - 630602, Sivagangai District [TM035707]
×
Temple History

தல பெருமை

பண்டைய பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்து பெருமை கொண்டதும், பதினெண் சித்தர்களில் ஒருவராகிய இடைக்காடர் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமி இடைக்காட்டூர் எனப்பட்டது. இத்திருக்கோயில் சுவாமியின் பெயர் அருள்மிகு செளந்தரநாயகியம்மன் சமேத அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் திருக்கோயிலாகும். இடைக்காட்டூர் என்று இன்று அழைக்கப்படும் இந்த ஊர் சித்தர் காலத்திற்கு முன்பு அழகிய பாண்டிய நல்லூர் எனும் பெயர் பெற்று விளங்கியது. இடைகாட்டூர் சித்தர் புரட்டாசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தார் என்றும், 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறுவர்.சித்தர் சிறு வயதில் ஆடு மேய்க்கும் போது கடும் வெயில் காரணமாக மர நிழலில் ஓய்வு எடுத்த போது அங்கு வந்த சித்தர் ஒருவர் அன்பு கொண்டு அவருக்கு தீட்சை கொடுத்ததாகவும், அன்றிலிருந்தே கடவுள் நிலை...