அருள்மிகு மாயூரநரதசாமி திருக்கோயில், Pethavanallur, Rajaplayam - 626117, விருதுநகர் .
Arulmigu Mayuranatha Swamy Temple, Pethavanallur, - 626117, Virudhunagar District [TM035744]
×
Temple History
தல வரலாறு
இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப்போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே பூஜித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவள் சற்றுத் தொலைவில் குன்றையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப் பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்றழைக்கப்படும் இடத்தை நெருங்கிய போது திடீரென்று அவளுக்கு பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமால் இடுப்பை பிடித்தவாறு அம்மா என்று அலறியபடி மயங்கி கீழே விழுந்தாள். அவளது அபயக்குரல் எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்கு கேட்டது அவளது நிலை கண்டு மனமிறங்கி மகேசன் அவளது தயார் கோலத்தில் மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது இறைவன் தன்...இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப்போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே பூஜித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவள் சற்றுத் தொலைவில் குன்றையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப் பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்றழைக்கப்படும் இடத்தை நெருங்கிய போது திடீரென்று அவளுக்கு பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமால் இடுப்பை பிடித்தவாறு அம்மா என்று அலறியபடி மயங்கி கீழே விழுந்தாள். அவளது அபயக்குரல் எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்கு கேட்டது அவளது நிலை கண்டு மனமிறங்கி மகேசன் அவளது தயார் கோலத்தில் மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது இறைவன் தன் திருவடி பெருவிரலால் நகத்தால் தரையைக் கீறி அந்த இடத்தில் நதி ஒன்றை உருவாக்கினார். அதிலிருந்து நீரைப் பருகி தாகம் தணித்துக் கொண்டாள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வருவதாக சொன்ன மகள் இன்னும் வரவில்லையே என்ற பதைபதைப்புடன் இவளைத் தேடி சிவநேசியின் தாய் வந்து கொண்டிருந்தபோது வழியில் பிரசவம் முடித்த மகளைப் பார்த்து பிரசவம் பார்த்தது யார் என்று கேட்க தாங்கள் தானே சற்று நேரத்திற்கு முன் பிரசவம் பார்த்தாய் என்ற குழப்பத்துடன் கேட்க சிவநேசியின் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ரிஷப வாகனத்தில் உமையுடன் எழுந்தருளிய ஈசன் என் பக்தையின் அபயக் குரல் கேட்டு மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்தது நானே என்ற கூறி மறைந்தார். அதன் பிறகு தான் இறைவனே மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்தது அவர்களுக்கு புரிந்தது. பெற்றவளாக அதாவது பெற்ற தாயாக ஈசன் எழுந்தருளியதால் பெற்றவள் நல்லூர் என அழைக்கப்பட்ட தலம் இன்று பெத்தவநல்லூர் என அழைக்கப்படுகிறது.