Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயில், திருவில்லிபுத்துர், திருவில்லிபுத்துர் நகர் - 626125, விருதுநகர் .
Arulmigu Periyamariamman Temple, Srivilliputur, Srivilliputur - 626125, Virudhunagar District [TM035776]
×
Temple History

தல பெருமை

மனிதனின் தொடக்கால வழிபாட்டு முறையில் தாய்தெய்வ வழிபாட்டு முறையே முதன்மையானதாகும். மனித சமூகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றத்தின் காரணமாக சமூகத்தில் பல்வேறு குழுக்களும்,அக்குழுவிற்குள் முரண்பட்ட பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளும் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை நெறிமுறைகளைப் போதிக்கும் பல்வேறு மதங்களும் தோன்றின. ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற மதங்களின் தோற்றத்திற்குப்பின் முதன்மையானதாக விளங்கிய தாய்தெய்வ வழிபாடு பின்னுக்கு தள்ளப்பட்டு சாதாரண எளிய மக்களின் வழிபாட்டு தெய்வமாக தாய்தெற்வம் மாற்றம் பெற்றது. அத்தாய் தெய்வத்தை பிற்காலத்தில் பரமேஸ்வரி அங்காளம்மன், காளியம்மன், பிடாரியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் என்று பல பெயர்களில் அழைத்து வழிபட்டனர். ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் பல புராண கதைகளும், வரலாற்றுத் தலங்களும் உள்ளடங்கியிருக்கிறது. இங்குள்ள மாரியம்மன் காளியம்மன் வடிவமாய் காட்சியளிப்பதும்,...