அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், Vebbillaipatti - 626203, விருதுநகர் .
Arulmigu Gangaiamman Temple, Vebbillaipatti - 626203, Virudhunagar District [TM035893]
×
Temple History
தல வரலாறு
யாதவர்கள் சந்திரனுடைய வம்சா வழியினர். சந்திர வம்சத்தில் யயாதி குருநாட்டை ஆண்டு வந்தான். யயாதி சுக்கர ஆச்சாரி மகள் தேவயானியை மணந்தார். அவர்களுக்கு யது என்ற மகன் பிறந்தான். யதுவின் சந்ததிகள் யாதவர்கள் ஆவார். யாதவ வம்சத்தில் சந்தானு என்ற அரசன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தான். ஒரு நாள் அரசன் கானகம் சென்ற போது கங்கை நதியில் இவர் முன் ஒரு பெண் தோன்றினாள் காதலித்தான் இவள் கெங்காதேவு பிரமனின் சாபத்தால் புவியில் பெண்ணாக பிறந்தாள் சந்தானு அவளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அவர்களுக்கு 8 குழந்தை பிறந்தனர். 8வது குழந்தை தேவவிரதன் ஆவான். சந்தானு தேவவிரதனை தனது நாட்டு யுவராஜாவாக பட்டம் சூட்டினார். கெங்கை சபதம் நீங்கி பிரமலோகம்...யாதவர்கள் சந்திரனுடைய வம்சா வழியினர். சந்திர வம்சத்தில் யயாதி குருநாட்டை ஆண்டு வந்தான். யயாதி சுக்கர ஆச்சாரி மகள் தேவயானியை மணந்தார். அவர்களுக்கு யது என்ற மகன் பிறந்தான். யதுவின் சந்ததிகள் யாதவர்கள் ஆவார். யாதவ வம்சத்தில் சந்தானு என்ற அரசன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தான். ஒரு நாள் அரசன் கானகம் சென்ற போது கங்கை நதியில் இவர் முன் ஒரு பெண் தோன்றினாள் காதலித்தான் இவள் கெங்காதேவு பிரமனின் சாபத்தால் புவியில் பெண்ணாக பிறந்தாள் சந்தானு அவளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அவர்களுக்கு 8 குழந்தை பிறந்தனர். 8வது குழந்தை தேவவிரதன் ஆவான். சந்தானு தேவவிரதனை தனது நாட்டு யுவராஜாவாக பட்டம் சூட்டினார். கெங்கை சபதம் நீங்கி பிரமலோகம் சென்றாள். தேவவிரதன் தன் அன்னையை வழிபட்டு வந்தான். பீஸ்மரை பின்பற்றி யாதவர்களும் கெங்கையை குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். யாதவர்கள் வாழ்ந்து வந்த பாம்பாதிரி எலமஞ்சி பட்டிணங்களில் 1000 ஆண்டுகள் பஞ்சம் நிலவியது. இவர்கள் தெற்கு திசை நோக்கி தனகொண்டா திருப்பதி நெல்லூர் வந்து பின்னர் பாண்டிய நாட்டுக்கு வந்தனர். பின்னர் இவர்கள் தெற்கு திசையிலுள்ள ராமநாதபுரம் வந்து அர்ணநதி கண்டு அங்கு தங்கினர். அங்கு கெங்காதேவியை வணங்கி அங்கு கோவில் கட்டி தேவிக்கு சிலை வடித்து நிலை நிறுத்தினர்.
அவ்விடம் வேப்பிலைப்பட்டி கிராமம் ஆங்கிலேயர் காலத்தில் வேப்பிலைப்பட்டி வருவாய் நில புல எண்.132ல் 11 ஏக்கர் நிலம் கோவிலுக்கு அளித்துள்ளனர். 1212ம் கணக்கை ஆதாரமாக 1865ல் மேற்படி நிலங்கள் கோவில் பெயரில் 533 பட்டா வழங்கப்பட்டுள்ளது. யாதவ சமூதாயம் வேப்பிலைப்பட்டி கெங்கா தேவியை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.