தல வரலாறு
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோவில் ஒரு பள்ளிப்படை கோவிலாகும். மூன்றாம் ராஜசிம்மன் மகனான சுந்தரபாண்டியன் இப்பகுதிக்கு வந்தபோது இறந்து போனதால் மூன்றாம் இராஜசிம்மனின் இளைய மகனும், சுந்தர பாண்டியனின் தம்பியுமான வீரபாண்டியன் தனது தமையன் நினைவாக இப்பள்ளிப்படை கோவிலை எழுப்பியுள்ளார் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள ஒரே பள்ளிப்படை கோவில் என்பது வரலாறு
தல பெருமை
திருச்சுழியல் இறைவனை தரிசிக்க சுந்தரர் வரும் பொழுது ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படவே திருச்சுழி இறைவனை நினைத்து பதிகம் பாடி இத்தலத்தில் இறைவன் காளை ரூபமாக சுந்தரருக்கு காட்சியளித்ததால் இத்திருத்தல இறைவன் காளைநாதர் எனும் திருப்பெயரால் வழங்கப்பெறுகிறார். இறைவி சொர்ணவள்ளி என்னும் திருப்பெயரால் வழங்கப் பெறுகிறார். சுவாமி மற்றும் அம்மன் சன்னதி தனித்தனியே கருவறை அர்த்த மண்டபம், மஹா மண்டபம் அமைப்பில் கிழக்கு நோக்கி அருள்பாளித்து கொண்டுள்ளனர். இத்திருக்கோவிலானது மாவட்ட தலைநகரான விருதுநகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்சுழி குண்டாற்றங்கரையில் அமைந்துள்ளது.