அருள்மிகு கேட்ட வரம் தரும் காளியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், கண்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் கோட்டை என்பவர் தவறி விழந்தாகவும், நீச்சல் தெரியாத அவர் காளி ஆத்தா காப்பாற்று என்று அலறி மயக்கம் அடைந்தாகவும் கண் விழித்து பார்த்த போது அவர் திருக்கோயிலுக்கு அருகே அமர்ந்திருந்தாகவும் கூறப்படுகிறது. மேலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருக்கோயிலுக்கு பஸ்ஸில் வரும் போது நடத்துனர் கல்லை கண்ட இடத்தில் எல்லாம் சாமியை உருவாக்கி கும்பிடுகிறீர்கள் என ஏளனம் பேசி இறக்கி விட்டதாகவும், அந்த பெண் நடக்க முடியாமல் அழுததாகவும் அன்றைய அந்த பேருந்து விபத்துக்குள்ளாகி நடத்துனர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. வேண்டி வருபவர்க்கு ...அருள்மிகு கேட்ட வரம் தரும் காளியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், கண்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் கோட்டை என்பவர் தவறி விழந்தாகவும், நீச்சல் தெரியாத அவர் காளி ஆத்தா காப்பாற்று என்று அலறி மயக்கம் அடைந்தாகவும் கண் விழித்து பார்த்த போது அவர் திருக்கோயிலுக்கு அருகே அமர்ந்திருந்தாகவும் கூறப்படுகிறது. மேலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருக்கோயிலுக்கு பஸ்ஸில் வரும் போது நடத்துனர் கல்லை கண்ட இடத்தில் எல்லாம் சாமியை உருவாக்கி கும்பிடுகிறீர்கள் என ஏளனம் பேசி இறக்கி விட்டதாகவும், அந்த பெண் நடக்க முடியாமல் அழுததாகவும் அன்றைய அந்த பேருந்து விபத்துக்குள்ளாகி நடத்துனர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. வேண்டி வருபவர்க்கு கேட்ட வரங்களை அள்ளி தருவதால் இங்கு வீற்றிருக்கும் காளியம்மன் கேட்டவரம் தரும் குடியிருப்பு காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது.