அருள்மிகு சந்திவிநாயகர் திருக்கோயில், Tirunelveli Town - 627006, திருநெல்வேலி .
Arulmigu Santhivinayagar Temple, Tirunelveli Town - 627006, Tirunelveli District [TM037887]
×
Temple History
தல பெருமை
வரலாறு-தலபுராணம்
திருக்கயிலையில் சிவபிரான் உமையாளைத் திருமணம் புரியும் சமயம் அக்காட்சியைக்காண அனைத்து உலகத்தவரும் அங்கு கூடினர்.அதனால் வடபகுதி உயர்ந்து சமன் இலாது இருந்தது.அப்போது சிவபிரான் ஏழு முனிவர்களில் ஒருவரான அகத்தியரை அழைத்து தென்திசை சென்று உலகை சமன் செய்யும்படி கூறினார்.அகத்தியர் மனம் வருந்தி திருமண காட்சி காண வேண்டும் என்று விண்ணப்பித்தார்.அதற்கு சிவபிரான் மணக்காட்சியை தென் பொதிகையில் அளிப்பதாகக் கூறினார்.அதனை ஏற்று அகத்தியர் தென் திசைக்கு பயணமானார்.அப்படி வரும்போது சிவபெருமள் அருளால் தமிழ் அறிந்து தமிழ் மணக்கும் தென் திசைக்கு வந்தார்.
அகத்தியர் கடலை அங்கையில் வாரி உண்டு உமிழ்ந்தார்.பொய் உடல் கொண்ட வாதாவியின் காயத்தை உண்டார்.விந்த மலையை தம் குறுங்கையில் அடக்கி அழுத்தியவர் குண்டிகையில் காவிரியை கொண்டு வந்தவர்,...வரலாறு-தலபுராணம்
திருக்கயிலையில் சிவபிரான் உமையாளைத் திருமணம் புரியும் சமயம் அக்காட்சியைக்காண அனைத்து உலகத்தவரும் அங்கு கூடினர்.அதனால் வடபகுதி உயர்ந்து சமன் இலாது இருந்தது.அப்போது சிவபிரான் ஏழு முனிவர்களில் ஒருவரான அகத்தியரை அழைத்து தென்திசை சென்று உலகை சமன் செய்யும்படி கூறினார்.அகத்தியர் மனம் வருந்தி திருமண காட்சி காண வேண்டும் என்று விண்ணப்பித்தார்.அதற்கு சிவபிரான் மணக்காட்சியை தென் பொதிகையில் அளிப்பதாகக் கூறினார்.அதனை ஏற்று அகத்தியர் தென் திசைக்கு பயணமானார்.அப்படி வரும்போது சிவபெருமள் அருளால் தமிழ் அறிந்து தமிழ் மணக்கும் தென் திசைக்கு வந்தார்.
அகத்தியர் கடலை அங்கையில் வாரி உண்டு உமிழ்ந்தார்.பொய் உடல் கொண்ட வாதாவியின் காயத்தை உண்டார்.விந்த மலையை தம் குறுங்கையில் அடக்கி அழுத்தியவர் குண்டிகையில் காவிரியை கொண்டு வந்தவர், சிவன் அருளால் தமிழ் அறிந்து அகத்தியம் உன்றும் இலக்கணத்தை அருளியவர். சிவபிரானுக்கு நிகராக விளங்கியவர்.அகத்தியர் தென்திசை வரும் முன்பே இங்கு சிறந்து விளங்கிய தமிழை வளர்த்து புகழ் கொண்டவர்.நீண்ட தமிழால் உலகத்தை அளந்து அறிந்தவர்.உமையின் வலக்கரத்து தோன்றிய பொருநையை உடன் அழைத்துச்சென்று கடலோடு சேர்த்தவர் எனும் பெருமை உடையவர்.
இவ்விதம் சிவபெருமானின் ஆணையை சிரமேற்கொண்டு தென்திசை வந்த அகத்தியர் வேணுவனமாகிய திருநெல்வேலிக்கு வந்தார்.சிந்துபூந்துறையில் நீராடி திருமூலநாதரை வழிபட்டார்.அகத்தியர் வழிபட்ட திருமூலநாதன் நெல்லையப்பர் திருக்கோயிலில் பவளத்தில் அமைந்துள்ளார். பலநாள் இங்கு தங்கி வரிபட்டார். அப்படி வழிபடும் போது விநாயகரை முன்னர் வழிபட்டார் என்பதை
புண்ணியம் பொருந்து சிந்துபூந் துறைத் தீரந் தன்னில்
விண்ணவர் பணிந்து போற்றும் விநாயகன் பாதம் போற்றி
நண்ணிமுன் குறிய கும்பன் நறுங்கனி தேங்காய் கன்னல்
வண்ணனை படைத்து வாழ்த்தி இயல் போடும் அர்ச்சித் தானால்
என திருநெல்வேலி தலபுராணம் அகத்தியர் வேணுவனத்தில் வந்த எருக்கத்தில் கூறும்.மேலும் இந்த பகுதியில் வடக்கு முகமாக செல்லும் தாமிரபரணியை விநாயகர் தடுத்தமை பற்றி
வந்த காஞ்சி உத்தர முகமாய் வரக்கண்டே
தந்தி மாமுக ஐங்கரத் தவன் எதிர் தடுத்தான்
சிந்து பூந்துறை மண்ணொடு செல்கிலன் என்ன
புந்தி அன்பொடு விடுத்தலும் சென்றனன் பொருநை
என மேற்படி சருக்கத்திலே கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தலபுராணத்திற்கு முந்தியது வேணுவன புராணம்.இதிலும் அகத்தியர் திருநெல்வேலி வந்து வழிபட்ட செய்தி உள்ளது.விநாயகரை வழிபட்டதாக செய்தியில்லை.இதில் பல செய்திகள் கூறப்படவில்லை.அதுபோல் இச்செய்தியும் கூறவில்லை.
அகத்தியர் வேணுவனநாதரை அர்ச்சுணன் புரிந்த சுருக்கம் ஒன்று இரண்டு புராணத்தும் உள்ளது.புவியினரும் முதன்மையில் பூசை புரியுங்கடவுள் விநாயகப்பெருமானை வழிபடுவது மரபு,அதன்படி அகத்தியரும்