அருள்மிகு வைத்தியலிங்க சுவாமி திருக்கோயில், Aladipatti - 627853, தென்காசி .
Arulmigu Vaithialinga Swami Temple, Aladipatti - 627853, Tenkasi District [TM037900]
×
Temple History
தல வரலாறு
தல பெருமை
எல்லாம் வல்ல எம்பெருமான் ஆரம்ப காலத்தில் கோளில் கொண்ட தலம் கல்லால் என்னும் கூழையன் கூண்டு என்ற இடமாகும். இவ்வூர் குறும்பூர் அருகே உள்ளது.இக்கோவிலை 60 வீட்டுக்காரர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். 60 வீடுகளும் கார்காத்த பிள்ளைமார்கள் நியமம் தவறாது பூஜைகள் செய்து
வந்தார்கள். கோவிலில் புதையல் இருப்பதை அறிந்து சித்தரை அணுகி புதயலை எடுத்து அன்று 60வீட்டுக்காரர்கள் அழிந்தனர். சித்தரின் மகன் கற்பக சித்தர் கனவில் வைத்திலிங்க சுவாமி தோன்றி நான்மண்ணில் புதைந்து காணப்படுகிறேன். என்னைஎடுத்து பூஜை செய்யுமாறு கூறி மறைந்தார் சித்தரின் மகன் சுவாமி சொன்னதை அப்படியே செய்து வந்தார். காலப்போக்கில் பஞ்சம் ஏற்படவே இறைவனை ஓர் ஓலைப்பெட்டியில் வைத்து ஊர்ஊராகச் சென்று யாசகம் பெற்று எளிமையான...எல்லாம் வல்ல எம்பெருமான் ஆரம்ப காலத்தில் கோளில் கொண்ட தலம் கல்லால் என்னும் கூழையன் கூண்டு என்ற இடமாகும். இவ்வூர் குறும்பூர் அருகே உள்ளது.இக்கோவிலை 60 வீட்டுக்காரர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். 60 வீடுகளும் கார்காத்த பிள்ளைமார்கள் நியமம் தவறாது பூஜைகள் செய்து
வந்தார்கள். கோவிலில் புதையல் இருப்பதை அறிந்து சித்தரை அணுகி புதயலை எடுத்து அன்று 60வீட்டுக்காரர்கள் அழிந்தனர். சித்தரின் மகன் கற்பக சித்தர் கனவில் வைத்திலிங்க சுவாமி தோன்றி நான்மண்ணில் புதைந்து காணப்படுகிறேன். என்னைஎடுத்து பூஜை செய்யுமாறு கூறி மறைந்தார் சித்தரின் மகன் சுவாமி சொன்னதை அப்படியே செய்து வந்தார். காலப்போக்கில் பஞ்சம் ஏற்படவே இறைவனை ஓர் ஓலைப்பெட்டியில் வைத்து ஊர்ஊராகச் சென்று யாசகம் பெற்று எளிமையான முறையில் பூஜை செய்து வந்தார். சிவலார்குளம் (ஆலடிப்பட்டிக்கு கிழக்கு என்ற ஊரின் அருகில் உள்ள மலையில் வந்து சித்தர் தங்கினார். இறைவனை நீராட்டவும், தன் தாகத்தைத் தீர்க்கவும் தண்ணீர் தேவைப்பட்டது. சித்தர் தன் கையிலிருந்த வேலால் தரையில் குத்தினார். அந்த இடத்தில் ஊற்று பொத்துக் கொண்டு வந்தது. ஆகவே அந்த இடத்திற்கு எச்சி-நா-ஊற்று என்று பெயர் வந்தது.ஆலமரமும் கூடிய இந்த இடமே இறைவன் கோயில் கொள்ள சிறந்த இடமெனக் கருதி அங்கேயே எம் பெருமானை எழுந்தருளச் செய்தார். அந்த இடம் ஆலடிப்பட்டி என்று பெயர் பெற்றது.