Arulmigu Vilvananathasamy Tirukovil, Kadayam - 627415, Tenkasi District [TM037908]
×
Temple History
தல பெருமை
அருள்தரும் நித்யகல்யாணி அம்மன் உடனுறை
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்,கடையம்
உப புராணங்களின் கபிலோ புராணம் என்பதும் ஒன்று அது கபிலயோகிக்கும் மாணிபத்ரருக்கும் ஸம்வாத ரூபமாக அமைந்துள்ளது அப்புராணத்தில் கடைய கிராம மகிமையும் நித்ய கல்யாணி- வல்வவனேசுவராரின் பெருமையும் தத்வஸாரா என்று புகழ்பெற்ற ராமநதியின் மாகாத்யமமும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.
முன்னொரு காலத்தில் மிதிலை தேசத்தின் அரசனான ஜனகர் காட்டிற்கு வேட்டையாடச்சென்றார் அங்கு கௌதமரை வணக்கி ஞானோபதேசம்...அருள்தரும் நித்யகல்யாணி அம்மன் உடனுறை
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்,கடையம்
உப புராணங்களின் கபிலோ புராணம் என்பதும் ஒன்று அது கபிலயோகிக்கும் மாணிபத்ரருக்கும் ஸம்வாத ரூபமாக அமைந்துள்ளது அப்புராணத்தில் கடைய கிராம மகிமையும் நித்ய கல்யாணி- வல்வவனேசுவராரின் பெருமையும் தத்வஸாரா என்று புகழ்பெற்ற ராமநதியின் மாகாத்யமமும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.
முன்னொரு காலத்தில் மிதிலை தேசத்தின் அரசனான ஜனகர் காட்டிற்கு வேட்டையாடச்சென்றார் அங்கு கௌதமரை வணக்கி ஞானோபதேசம் செய்யுமாறு பிரார்த்தித்தார் கௌதம முனிவரும் மிதிலை அரசனான அந்த ஜனகரை நோக்கி கூறலானார்
ஓ ஜனக மகா ராஜனே கேளுங்கள் முன்னொரு சமயம் அகத்தி மகாமுனிவர் மலய மலைச்சிகரம் சென்றார் அங்கு ஈசனையும் அம்பிகையும் புசித்தார் முடிவில் ப்ராம்மார்பணம் என்று சொல்லி கமண்ட நீரைக் கீழே விட்டார் அதிலிருந்து ஒரு தாமரபரணி நதி மற்றொரு துளி தத்வஸாரா நதி என இரு துளிகளாகத்தெறித்து இரு நதிகாளக மாறி ஓட ஆரம்பித்தன
முன்பு ஒருகாலத்தில் பிரும்மதேவர் பரமேசுவரனை நோக்கி தவம்செய்தார் பரமேஸ்வரனும் அவருக்கு ஒரு வில்வக்காய் (பழத்ததை)க்கொடுத்து மறைந்தார் பிரும்ம தேவரும் அதை மூன்றாக உடைத்தார் ஒன்றைக் கையிலாய மலையிலும் மற்றொன்றை மகாமேரு மலையிலும் முன்றாவதை தடவாதசாந்த வனத்திலும் நட்டார் பிரும்மதெவனின் கட்டளைபடி மற்ற தேவர்கள் இந்த மூன்றிலும் நன்கு ஜலம் பாய்ச்சி வளர்த்தார்கள் ஆனால் மற்ற இரண்டு இடங்களை காட்டிலும் த்வாதசாந்தவனத்தில் வில்வவமரங்கள் மிகவும் செலிப்பாக வளர்ந்தன அதனாலேயே இந்தவனத்திற்கு வில்வ வனம் என்று இங்கு கோயிலில் கொண்டெழுந்தருளிருக்கும் பெருமானுக்கு வில்வவனனேஸ்வர் என்றும் பரஸித்தி உண்டாயிற்று
இத்திருக்கோயில் தென்காசி இருந்து பாபாநாசம் செல்லும் வழியில் கடையம் அமைந்துள்ளது