Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், Melathiruvenkatanathapuram - 627006, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathy Temple, Melathiruvenkatanathapuram - 627006, Tirunelveli District [TM037942]
×
Temple History

தல வரலாறு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மேலத்திருவேங்கடநாதபுரம்,அருள்மிகு வெங்டாசலபதி திருக்கோயில் அமைந்த காட்டுப் பகுதி புராண காலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டன. இப்பகுதியில் அமைந்த உயர்ந்த மலைக்குன்றுக்கு சுவேதா மலை என்று பெயர் மகாபாரதம் அருளிய வியாச மாமுனியின் முதன்மை சீடரான பைலர் என்ற ஒரு முனிவர். இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் அமர்ந்து சீனிவாசப் பெருமாளை மனதில் நினைத்து தவம் செய்தார். அப்போது அங்கு கோயிலோ, பெருமாள் சிலையோ பூஜை செய்ய சிலைகளோ கிடையாது. பைலர் தன் மனத்திற்குள்ளே பெருமாளை ஒரு கோடி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக...

தல பெருமை

இத்திருக்கோயில் அமைந்த காட்டுப்பகுதி புராணகாலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்துள்ள உய்ர்ந்த மலைக்குன்றிற்கு சுவேதா மலை என்று பெயர். மகாபாரதம் அருளிய வியாசமுனிவரின் முதன்மை சீடரான பைலர் என்ற ஓரு முனிவர் இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமர்ந்து சீனிவாசபெருமாளை மனதில் நினைத்து ஓருகோடு மலரிடடு அர்ச்சனை செய்து வழிபட ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் ஓன்று சேர்ந்து பிரகாசமான ஓளியாக வானத்தில் தோன்றினார்.அவர் காலடியில் தாமரபரணி தெய்வத்தையும்பைலர் கணடார்உடனே பைலர் இந்த இருவரையும் வணங்கி சீனிவாசபெருமாளே உன் ஆனந்த காட்சியை யான்கண்டு உளம் மகிழ்ந்தேன் என்றார். மேலும் வடக்கு வேங்கடமலையான திருப்பதியில் குடிக கொண்ட வெங்கடாசலபதிபெருமானே ...