


தல வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன் அன்னை பராசக்தி அக்னி மாரி ஆனால் மாரி என்ற திருநாமங்கள் ஓடு இரண்டு சிறுமியாய் வடிவெடுத்து ஒருநாள் காற்று இடியுடன் மின்னல் செயற்கை மழை பொழியும் கருக்கல் நேரத்தில் இந்த கிராமத்தின் வடுகர்கள் குடியிருக்கும் பகுதியில் வந்து நின்றார் அக்குலத்து பெண்கள் சிறுமியாய் வந்தது அகிலம் காக்கும் அன்னை என்பதை சிறு மதியால் உணராது விரட்டினர் ஊர்முழுக்க சுற்றிய அச் சிறுமிகள் வண்ணார் ஒருவரின் வீட்டின் முன் போய் நின்றார்கள் மழையில் நனையும் சிறுமியர் முகம்பார்த்து வருந்திய அவன் ஆர் ஆசிரியருக்கு சிரசு நனையாமல் இருக்க இரண்டும் முரங்களைக் கொடுத்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அந்த சிறுமிகள் நாங்கள்...பல நூற்றாண்டுகளுக்கு முன் அன்னை பராசக்தி அக்னி மாரி ஆனால் மாரி என்ற திருநாமங்கள் ஓடு இரண்டு சிறுமியாய் வடிவெடுத்து ஒருநாள் காற்று இடியுடன் மின்னல் செயற்கை மழை பொழியும் கருக்கல் நேரத்தில் இந்த கிராமத்தின் வடுகர்கள் குடியிருக்கும் பகுதியில் வந்து நின்றார் அக்குலத்து பெண்கள் சிறுமியாய் வந்தது அகிலம் காக்கும் அன்னை என்பதை சிறு மதியால் உணராது விரட்டினர் ஊர்முழுக்க சுற்றிய அச் சிறுமிகள் வண்ணார் ஒருவரின் வீட்டின் முன் போய் நின்றார்கள் மழையில் நனையும் சிறுமியர் முகம்பார்த்து வருந்திய அவன் ஆர் ஆசிரியருக்கு சிரசு நனையாமல் இருக்க இரண்டும் முரங்களைக் கொடுத்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அந்த சிறுமிகள் நாங்கள் வட நாட்டில் இருந்து வருகிறோம் எங்களுக்கு இருக்க இடம் தந்து பசி அமர்த்த வேண்டும் என்று பதில் கூறினர் அதற்கு அவர்கள் எங்கள் வீடுகளில் உணவு சமைக்கும் பழக்கம் இல்லை நான் ஊருக்குள் சென்று துணிகளை வெளுக்க கொடுக்கின்ற எஜமானர்கள் வீட்டில் சென்று உணவு பெற்று வந்து உங்களுக்கு தருகிறேன். என்று கூறிவிட்டு புது பாண்டம் ஒன்றை எடுத்துக் கொண்டு உணவு சேகரிக்க ஊருக்குள் சென்றார் உணவைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய அவர் வீட்டில் அமர வைத்திருந்த சிறுமியரை தேடியபோது அவ்விருவரையும் காணாது திகைத்து இந்த அதிசய செய்தியை ஊர் பெரியோர் இடத்தில் போய் சொல்ல அவர்கள் அதனை நம்பவில்லை. அன்னை அருள் பாலிக்க மனம் கொண்ட பெண் எத்தகைய தடைகள் தகர்ந்து விடும் அல்லவா ஊருக்குள் காற்று மழை இடி மின்னல் மரங்கள் சாய்தல் வீடுகள் இடிந்து விழுதல் வைசூரி காய்ச்சல் போன்ற நிகழ்வுகள் ஏற்படத் துவங்கின. பயந்துபோன ஊரார் ஜோதிடரை அழைத்து குறி கேட்க அவர் சிறுமியர் வடிவம் கொண்டு ஊருக்குள் வந்திருந்தது அத்தனை மாரி மகமாயி என்பதை ஊராருக்கு சொல்ல அருள்புரிய அன்னை வந்ததை எண்ணி ஆனந்தக்கண்ணீர் விட்டனர் ஊர்மக்கள் அதேநேரம் அறியாமல் செய்த தவறுக்காக அன்னைக்கு ஆலயம் எழுப்பவும் முடிவு செய்து அருள் வாக்கு கேட்டனர் தாயே தங்களை அறியாமல் சீறித் துரத்தி விட்டோம் உன் திரு உருவ சிலை அமைத்து வணங்குகிறோம். என்று வேண்டியபோது அன்னையின் திருவுருவச் சிலை அமைத்து நித்திய பூஜை செய்து வணங்கி உங்களால் நிறை செலுத்த முடியாது. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்களை நினைத்து பச்சை மண்ணால் திரு உருவம் செய்து நீதியுடன் வணங்கி சாதம் படைத்து போட்டு கயிறு குத்தி ரத்த தானம் செய்து வீதி விளையாடி வணங்கி எங்களை காட்டில் கொண்டு போய் சூழ் ஆடு ஒன்றைக் குத்தி பலி செய்துவிட்டு வரவேண்டும். என்ற அருள்வாக்கு உரைத்தாள் அறியாமல் செய்த தவறை அந்தக்கணமே மன்னிக்கும் கருணை வெல்லமல்லவா. கண் கண்ட தெய்வம் அன்னை மாறி அவள் குடியிருக்க மாடமாளிகை கேட்கவில்லை உடுத்திக்கொள்ள பட்டாடையும் சூடிக்கொள்ள பொன்னும் வைரமும் கேட்கவில்லை அன்று அன்னை அருள்வாக்கு முறைத்தபடி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை அன்று விமரிசையாக கொடை விழா நடத்தப்பட்டது. இந்த கொடை விழாவிற்காக அன்னையை நிரந்தர திருவுறு இல்லாத இத்திருக்கோயில் அன்னை இரு சிறுமியரும் இவ்வூருக்கு வந்த திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் மண்ணாள் மாரி மகமாயி ஆகியோரின் உருவத்தை சமைக்க இவ்வூரைச் சுற்றியுள்ள ஏழு குணங்களான கரடிகுளம் வெட்டுவான் குளம் சிவலார்குளம் வேளாளர் குலம் ஆமை குளம் அச்சன்குளம் மற்றும் புதுக்குளம் ஆகியவற்றிலிருந்து வியாழக்கிழமை அன்று மண் எடுத்து வரப்படுகிறது. வெள்ளிக்கிழமை முழுவதும் காயவைத்து பதப்படுத்தப்படும் அம்மன் ஆனது சனிக்கிழமை அன்று இத்திருக்கோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது சனிக்கிழமை நள்ளிரவில் ஊரைச் சுற்றியுள்ள பனங்காட்டில் வளர்ந்துள்ள பனை மரங்களிலிருந்து இறக்கப்படும். 17 கொண்டு ஞாயிறு அன்று அன்னை மாறி மட்டும் மகமாயி உருவத்தை வேளாளர் குலத்தவர் சமைக்கின்றனர். இவ்வாறு உருவம் சமைத்தல் அடிவாரம் செய்தல் என்ற ஊரில் அழைக்கப்படுகிறது இவ்வுருவம் சமைத்ததை காண வரும் பக்தர்கள் அடிவார பணம் எடுக்கும் காணிக்கையும் செலுத்துகின்றனர் ஞாயிறன்று இரவில் அன்னையின் திருவாபரணங்கள் ஆன கிரீடம் மூலம் தண்டை ஒட்டியாணம் போன்றவை அன்னையை முதன்முதலில் வரவேற்று உபசரித்து வண்ணார் சமூகத்தினரிடம் கொடுக்கப்படுகின்றன. வண்ணார் சமூகத்தினர் அன்னையை முதன் முதலில் வரவேற்று உபசரித்த வீடு இன்று ஆலயம் ஆக்கப்பட்டுள்ளது அந்த ஆலயத்தில் வைத்து அன்னையின் சிரசிற்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வண்ண சமூகத்தினர் வண்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்படங்களில் மேளதாளத்துடன் ஊருக்குள் சென்று அமுது எடுத்து மாரியம்மனுக்கு படைக்கப்படுகின்றனஞாயிறு மாலை திங்கள் காலை மாலை செவ்வாய் காலை ஆகிய வேலைகளில் ஊரில் எடுத்து அம்மனுக்கு படைக்கப்படுகின்றனர். அம்மனுக்கு படைத்த அமுதை ஏழை எளியவர்களுக்கு வழங்குகின்றனர் கொடைவிழா நாளான செவ்வாய்க்கிழமை அன்று மாலையில் அன்னை சிறுமியர் உருக்கொண்டு ஊருக்கு வந்தபோது அவளை அங்கீகரிக்க இயலாத பாவத்திற்கு பரிகாரமாக அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த கயிறு குத்துவதாக நேர்ந்து மணமாகாத ஆடவர்கள் விலா பகுதியில் மூங்கிலால் செய்யப்பட்ட கயிறு போன்ற பொருளை குத்தி ரத்தம் சிந்தும் நிகழ்வு விமரிசையாக நடைபெறுகிறது கரிசல் நகர் வந்த அம்மன் இருவரையும் வடக்கு குடியினர் விருந்து பெறாததால் அதற்கு பரிகாரமாக சமுதாயத்தினரை முதலில் கயிறு குத்தி பக்தியுடன் ஆடுகின்றனர் இரவு 8 மணியளவில் மண்ணால் செய்யப்பட்ட அன்னையின் திருவுரு விற்கு ஆடை ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு கண் திறக்கப்படுகிறது அன்னை அருள் கண் திறந்து பார்க்கும் நேரத்தில் அருகிருந்து பார்க்கும் யாருக்கும் அந்த அருட் பரவசம் தொற்றிக்கொள்கிறது. செவ்வாய் அன்று இரவு முழுவதும் சப்பரத்தில் வைத்து திருவீதி உலா வரும் அன்னையர் புதன்கிழமை காலை அதிகாலையில் இரண்டு சூலகங்கள் மட்டுமே நிரந்தரமாக கொலுவீற்றிருக்கும் கருவறையில் அமர வைக்கப் படுகின்றனர் அன்றைய தினம் வடுக சமூகத்தினர் கறியுடன் சோறு சமைத்து அம்மன் இருவருக்கும் ஒடுக்கு சாதம் படைக்கின்றனர் வன்னியர் சமூகத்தினர் சூழலுடன் குழு அமைத்து படைப்பு சாதம் படைக்கின்றனர். இந்த ஒடுக்கு சாதகமானது மண்ணால் செய்யப்பட்ட உறை மூடியில் சோறு மீன் முட்டை தயிர் கலந்த உணவாக மேளதாளங்களுடன் எடுத்துவரப்பட்டு அம்மன் சன்னிதி முன் வைக்கப்பட்டுள்ள துணியில் கொட்டப்படுகிறது. இச்சாற்றை பிரசாதமாக சிறிது உண்டால் குழந்தை பேறுக் கிடைக்கும். என்ற நம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது கொடை விழாவின் கடைசி நாளான புதன்கிழமை சாம வேளையில் அம்மனுக்கு கிடா கோழி சேவல் பலியிடப்பட்ட பின் தீபாராதனை காட்டபட்ட பின் மாலைகளை கலையப் படுகின்றனர். படிகளையப்பட்ட அம்மன் விக்கிரங்களை வண்ணார் இருவர் தலையில் சுமந்து கொண்டு காட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அம்மன் இருவரும் காட்டிற்கு செல்லும் காட்சியை காணும் மக்கள் சோகமாய் மாறிவிடுகின்றனர் திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் இருந்து கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் இரு அம்மன்களின் விபரங்களும் இறக்கி வைக்கப் படுகின்றது அம்மன் வைக்கப் பட்ட இடத்தைச் சுற்றிலும் சூலாயுதத்தால் கோடு போட்டு அம்மன் ஊருக்குள் வராது இருக்கும்படி தடுக்கப்படுகிறது நிகழ்ச்சியுடன் கோடை விழா நிறைவு பெறுகிறது காட்சி தரும் அம்மன் இருவரும் மழையில் நனைந்து முழுவதும் கரைந்து விட்டால் ஊர் செழிக்கும் நன்மை நடக்கும் என்று நம்பிக்கை நிலவுகிறது காற்றோடு காற்றாக தான் வருவாள் மாறி கையில் சூலாயுதம் தன்னுடனே மாத்திரை நேரத்தில் மாயா சொரூபமாய் மாநிலமெங்கும் நிறைந்திருப்பாள். பட்டி பெருகவே வாழ்க வேணும் பால் பானையும் பொங்கவே வாழ்க வேணும் மட்டும் அடங்காத மாறி அருளால் மக்கள் அனைவரும் வாழ்க வேணும் ஒவ்வொரு உள்ளத்தையும் கோவிலாக விலையும் கருணை பெருந்தெய்வம் இங்கே நிரந்தர உருவத்தைக் கூட இறந்துவிட்டதை காற்றில் கலந்து வரும் இத்தலத்து கும்மி பாடல் எல்லையில்லா பெருமையைபறைசாற்றி நிற்கிறது
