முற்காலத்தில் சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.
அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன்...முற்காலத்தில் சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.
அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது.
உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.
அர்ஜுனனின் இந்த வீரதீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது.
பின் ஒரு நாள் தென்னகத்திலிருந்து புனித நீராட வந்த பல்கி என்னும் பாண்டிய மன்னனன் கங்கையில் நீராடிய பொழுது இவ்விக்ரகம் அவரது கைகளில் கிடைக்கப்பெறுகிறது.
அந்த விக்ரகத்தின் எழிற்கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தான் அப்பாண்டிய மன்னன். அதனை தன் ஆட்சிக்குட்பட்ட தென்தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தாமிரபரணிக் கரையில் எழுந்தருளச் செய்தான். சுவாமிக்கு கருவறையுடன் கூடிய அழகிய திருக்கோவிலை நிர்மாணித்து, ராஜகோபாலர் என்ற திருப்பெயர் சூட்டி வழிபட்டு வந்தான். அதுவே, தற்போதைய திருக்கோயில்.
ஆக இந்திரலோகத்து கோபாலனே இங்கு எழுந்தருளி நமக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்குள்ள ராஜகோபாலர் திருமேனி மிகவும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. முகத்தில் திருநாமம் சாத்தப்பட்ட வடுவே பெரிதாக தெரியும். இருந்தும் இவர் இடைநெளித்து நிற்கும் கோலத்தை காண கண்கள் கோடி வேண்டும்.
மூலவர் வேதநாராயணர் மற்றும் அழகியமன்னார்:
அஷ்டாங்க விமானத்தில் உள்ள இரண்டு தளங்களில், கீழ் தளத்தில் மூலவராக வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் பெருந்திருமேனியராக வேதவல்லி, குமுதவல்லி தேவியர்களுடன் காட்சித்தருகிறார். நான்கு வேதங்களைக் காத்து மகரிஷிகளுக்கு அருளிய பகவான், என்பதால் இவருக்கு “வேதநாராயணர்” எனப்பெயர். கருவறையில் பெருமாள் மற்றும் தாயார்களோடு சாமரம் வீசும் இரண்டு கன்னியர் மற்றும் இரண்டு ரிஷிகளும் உள்ளனர்.
அஷ்டாங்க விமானத்தில் உள்ள மேல் தளத்தில் அழகியமன்னார் நின்றகோலத்தில், ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள் மற்றும் இரண்டு ரிஷிகளுடன் வர்ணகலாபத்திருமேனியராக (சுதை வடிவம்) காட்சித்தருகிறார்.
ராஜகோபாலர்:
இக்கோவிலில் உற்சவர் ராஜகோபாலர் தன் இரு தேவியர்களோடு அழகாக காட்சித்தருகிறார். இவருடைய திருமுகத்தை நாம் உற்று நோக்கும் போது இவரின் பழமையையும் பெருமையையும் நாம் உணரலாம்.
திருக்கோவில் சிறப்புக்கள்:
முற்காலத்தில் பாளையக்காரர்கள் தாங்கள் தங்குவதற்கு உரிய இடமாக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்ததால், பாளையங்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். அதற்கேற்ப கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றைக்கும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது.
ஒரு காலத்தில் இங்கே செண்பக மரங்கள் அதிகம் சூழ்ந்திருந்த காரணத்தினால் இத்தலத்துக்கு ‘செண்பகாரண்ய க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல், இங்கே அமைந்திருக்கும் திருக்கோயிலுக்கு ‘வல்லப விண்ணகர்’ என்று திருப்பெயர். கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு முதலாம் ராஜராஜன் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.
இத்திருக்கோவிலின் விமானம் அஷ்டாங்க விமானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒரே கோவிலுக்குள் இரண்டு அடுக்குகளில் பெருமாள் காட்சியளிப்பதும் சிறப்பம்சம் ஆகும்.
வேதங்களை காத்து ரிஷிகளுக்கு ஞானத்தை அருளிய பெருமாள் என்பதால் இவர் அருளும், இவ்வூரிலும் கற்றறிந்த சான்றோர் பலர் நிறைந்து கல்வித்துறையில் சிறப்புப்பெற்று வருகிறது. (பாளையங்கோட்டைக்கு தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்பு அந்தஸ்து உள்ளது குறிப்பிடத்தக்கது)