அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், நரசிங்கநல்லூர் - 627604, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathy Temple, Narasinga Nallur - 627604, Tirunelveli District [TM037986]
×
Temple History
தல பெருமை
விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது சிற்றரசர்களின் கலகத்தை அடக்க தென்பாண்டி நாட்டுக்கு சாளுவ நரசிம்மன் என்ற மன்னனின் படைத் தளபதியாக வந்தவர் நரசப்ப நாயக்கர். இவர் தாமிரபரணி நதிக்கரையின் அழகைக் கண்டு ரசித்து வரும்போது தன் இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவை தியானித்து, எல்லோருக்கும் படி அளக்கும் பரந்தாமா எனக்கு புத்திரபாக்கியத்தை அருள மாட்டாயா என மன்றாடி வேண்டினார். அப்போது ஆகாயத்தில் அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. தாமிரபரணி நதிக்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனது பாதங்கள் பதிந்துள்ள தடயம் இருக்கும். அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு எனக்கு ஒரு கோயிலை எழுப்பி வழிபட்டால் உனக்கு அழகான ஆண் மகவு ஒன்று பிறக்கும்....விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது சிற்றரசர்களின் கலகத்தை அடக்க தென்பாண்டி நாட்டுக்கு சாளுவ நரசிம்மன் என்ற மன்னனின் படைத் தளபதியாக வந்தவர் நரசப்ப நாயக்கர். இவர் தாமிரபரணி நதிக்கரையின் அழகைக் கண்டு ரசித்து வரும்போது தன் இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவை தியானித்து, எல்லோருக்கும் படி அளக்கும் பரந்தாமா எனக்கு புத்திரபாக்கியத்தை அருள மாட்டாயா என மன்றாடி வேண்டினார். அப்போது ஆகாயத்தில் அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. தாமிரபரணி நதிக்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனது பாதங்கள் பதிந்துள்ள தடயம் இருக்கும். அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு எனக்கு ஒரு கோயிலை எழுப்பி வழிபட்டால் உனக்கு அழகான ஆண் மகவு ஒன்று பிறக்கும். அம்மகன் மிகவும் கீர்த்திமானாகவும், பராக்கிரமானாகவும் விளங்குவான் என்று கூறியது. இதனைக்கேட்டு நரசிம்மன் பாதச்சுவட்டை தேடி அலைந்தான். இறுதியில் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்து அங்கு கோயில் கட்டி பகவானை வழிபட்டு புத்திரனை பெற்று மகிழ்ச்சியடைந்தான். பின்னர் ஊரைச் சுற்றி அந்தணர் குடியிருப்பு போன்று மற்ற குடியிருப்புகளை ஏற்படுத்தினான். இங்குள்ள எம்பெருமானை பிரசன்ன வெங்கடாசலபதி எனவும், இவ்வூருக்கு தன் மன்னன் நரசிம்மன் பெயரைக் கொண்டு நரசிங்கநல்லூர் எனவும் அழைக்கச் செய்து தலைநகருக்கு திரும்பி சென்றான். படைத் தளபதிக்கு பிறந்த அக்குழந்தையே பின்னாளில் விஜயநகர சாம்ராஜ்ய சிம்மாசனத்தை அலங்கரித்த கிருஷ்ணதேவராயர் ஆவார் என வரலாறு கூறுகிறது.