Arulmigu Sivasailanaathaswamy Tirukovil, Sivasilam - 627412, Tenkasi District [TM038000]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு சிவசைலநாதசுவாமி திருக்கோயில் சிவசைலம்,
இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான் கோவிலுக்கு வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் மன்னனால் கோவிலுக்குச்செல்ல முடியவில்லை, மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டுவர்க்கு வேடிக்கை காட்டுவதை வடிக்கையாக்கொண்ட அப்பன் வேந்தனிடத்து விளையாட நினைத்தார். வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் திருக்கோயில் நுழைந்தபோது, பூஜை முடிந்து கோயில்நடைஅடைக்கப்பட்டது. மூடிய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் தீடிர் வருகையைக் கண்ட அர்ச்சகர் கோயிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாகக்கொடுத்து, அவள் தலையில் சூடியிருந்த மலர் மாலையைத் திரும்பப் பெற்று மன்னனுக்குப் பிரசாதமாகக் கொடுத்தார்.
...அருள்மிகு சிவசைலநாதசுவாமி திருக்கோயில் சிவசைலம்,
இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான் கோவிலுக்கு வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் மன்னனால் கோவிலுக்குச்செல்ல முடியவில்லை, மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டுவர்க்கு வேடிக்கை காட்டுவதை வடிக்கையாக்கொண்ட அப்பன் வேந்தனிடத்து விளையாட நினைத்தார். வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் திருக்கோயில் நுழைந்தபோது, பூஜை முடிந்து கோயில்நடைஅடைக்கப்பட்டது. மூடிய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் தீடிர் வருகையைக் கண்ட அர்ச்சகர் கோயிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாகக்கொடுத்து, அவள் தலையில் சூடியிருந்த மலர் மாலையைத் திரும்பப் பெற்று மன்னனுக்குப் பிரசாதமாகக் கொடுத்தார்.
சிவதரிசனம் செய்ய முடியபவிட்டாலும் அவருக்கு சூட்டிய புஸ்பத்தையாவது தரிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி மனம் மகிழ்ந்த மன்னன் அம்மாலையை கண்களில் ஒற்றிக்கொண்ட போது மலரில் உரோமம் (முடிய) தென்பட்டது அதை அபசகுனம் என்று கருதிய மன்னன் அர்ச்கரிடம் பிராசத்தில் முடி எப்படி வந்தது என்று கேட்டான் அதற்கு அர்ச்சகர் சுவாயிடம் சடைமுடியுண்டு மாலையில் ,இருந்தது சுவாமியின் முடியே என்று பொய் சொல்லிச் சமாளிக்கிறார் அப்படியானால் அந்தச் சாடாமுடியை நான் தரிசிக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார் மன்னன்
அர்ச்சகர் இறைவனிடத்து பிராத்தனை செய்து தன்னைக்காப்பாற்றுமாறும் இல்லையேல் உயிர் நீக்கப்போவதாகவும் முறையிட சிவசைலநாதர் அசரீரியாக சுதர்சனப்பாண்டியனை சோதிக்கவே யான் இவ்வாறு செய்தேன் அவனுக்கு தரிசனம் தந்து உன்னை காப்பேன் என்றும் கருவறையின் மூன்று புறங்களிலும் துளைகள் அமைப்பாயாக என்றும் கூறினார்
சிலநாட்களுக்குப் பின் கோவிலுக்கு வந்த மன்னனை சுவாமிக்கு பின்னால் உள்ள துளைக்கு நேராக வந்து நிற்கும்படி வேண்டிக்கொண்டார் அர்ச்சகர் அதன்படியே மன்னன் சுவாமியின் பின்புறமுள்ள துளைப்பக்கமாக வந்த நிற்க அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தினுள் இருந்து கற்புர திபம் காட்ட அந்த தீப ஒளியில் துளையின் பின்னாலிருந்த பாண்டிய மன்னன் இறைவனை சடாதாரியாகத் தரிசனம் செய்து திகைப்பில் ஆழ்ந்து இறைவா அர்ச்சகர் கூறியது பொய் என்றே கருதினேன் என்னை மன்னித்தருள்க என்று இறைவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டான் இன்று இத்தலம் சிவசைலநாதருடைய சடைமுடிகளின் ரேகைகளை நாம்தரிசனம் செய்யலாம்
இத்திருக்கோயில் தென்காசி மாவட்டம் சிவசைலம் கிராமத்தில் அமைதுள்ளது மேற்கே பார்த்த சிவலிங்கம்