Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா திருக்கோயில், செட்டியாபத்து, Chettiyapathu - 628203, தூத்துக்குடி .
Arulmigu Swamy Chithambareswarar Group Of Temple, Chettiyapathu - 628203, Thoothukudi District [TM038191]
×
Temple History

தல வரலாறு

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும் தெய்வங்கள் வாழும் கோயில்கள் சிறந்த பிரார்த்தனை ஸ்தலங்களாக புகழ்பெற்று, அந்த ஊர் மக்களால் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலும் பக்கத்து மாவட்டங்களிலும் புகழ்பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் செட்டியாபத்து கோயில் என்றும், திருமணி கோயில் என்றும், ஐந்து வீட்டு சுவாமி கோயில் என்றும் சிறப்போடு அழைக்கப் பெற்று வரும். இத்திருக்கோயிலின் பெருமைகளையும், நடைமுறை பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் உற்று நோக்கினோமானால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சி செய்த வைணவப் பெரியவரான...

தல பெருமை

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் செட்டியாபத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான, வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலயமாகும். இந்த ஆலயம் ஐந்து வீடுகளின் தெய்வமாக வழிபடப்படுகிறது, மேலும் இது பஞ்சபாண்டவர்களின் தலவராகக் கருதப்படுகிறது. ஜாதி பேதமின்றி அனைவரும் வழிபடும் ஆலயமாக இது திகழ்கிறது.

இலக்கிய பின்புலம்

ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

புராண பின்புலம்

ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். 1 ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை...