அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், Tholappapannai - 628252, தூத்துக்குடி .
Arulmigu Kailasanathar Temple, Tholappapannai - 628252, Thoothukudi District [TM038240]
×
Temple History
தல வரலாறு
நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும். இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.
திருநெல்வேலிலிருந்து 17 கி .மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்பநாடு. திருநெல்வேலிலிருந்து வல்லநாடு கொங்கராயக்குறிச்சி கலியாவூர், உலக்குடி ,பூவாணி, அல்வார்கற்குளம் செல்லும் நகர பேரூந்துகள் அடிக்கடி செல்கின்றன.
முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும்...நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும். இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.
திருநெல்வேலிலிருந்து 17 கி .மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்பநாடு. திருநெல்வேலிலிருந்து வல்லநாடு கொங்கராயக்குறிச்சி கலியாவூர், உலக்குடி ,பூவாணி, அல்வார்கற்குளம் செல்லும் நகர பேரூந்துகள் அடிக்கடி செல்கின்றன.
முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும் அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் அமைத்துள்ளது. இயற்கை காலில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் காலில் கண்ணனுக்கு விருதாக உள்ளது. வாழை தோட்டங்களும் வயல் வெளிகளும் நிறைந்தஅப்பகுதி சிந்தை கவர்கிறது.
நவகாலயத்தின் எந்த கோயிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு சிவா பெருமான் குருபாகவனாக அருள் பாலிக்கும் முரப்பாணத்திட்கு மட்டுமே உண்டூ.
புண்ணிய மதியம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது. போன்று வடகிலுருந்து தெற்கு நோக்கி செல்கிறது.
இதனால் இந்த இடத்திற்கு தட்சிணா கங்கை எனப் பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
அது மட்டுமல்ல புராணச் சிறப்பு பெற்று தச அவதார தீர்த்த கட்டம் இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள்.
இது இந்தியாவின் மிக சிறப்பூமிக்க இடமாகும்.
பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் முரம்பு எனப்படும். முரம்பு உடைய நிலத்தை கொண்டதனால் இந்த ஊர் முறப்பநாடு எனப் பெயர் பெற்றது.
சூரபத்மனை சேர்ந்த அசுரர் செய்த தொல்லையை பொறுக்க மாட்டாமல் முனிவர்கள் முறைப்படி நின்று இறைவனிடம் முறைப்பாடு செய்த இடம் இது என்பதாலும் இப்பெயர் வந்தது.
சிவா பெருமான் திருவுளம் இறங்கி முனிவர்க்கு அருள் பாலித்தார். இதனால் முறப்பநாடு என ஏற்பட்டு அதுவே பின்னர் மருவி முறப்பநாடு ஆனது.
இவ்வூருக்கு அருகே முரம்பேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர மார்க்கண்டேயர் பரம்பரையினர் பூஜை செய்து பேரு பெற்ற இடமாகும். தாமிரபரணி ஆறானது கிழக்கு நோக்கி ஓடி வந்து முறப்பநாடு பகுதியில் மட்டும் திரும்பி வடகிலுருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது.
கங்கை ஆறு போன்று இவ்விடத்தில் ஆறு ஓடுவதால் இப்பகுதி தட்சிணை கங்கை என்று அழைக்கபடுகிறது. இப்பகுதியில் நீராடுவது வாரணாசியில் நிராடியதற்கு சமம்.
ஆற்றின் இப்பகுதி காசி கட்டம் சபரி தீர்த்தம் என்றும், ஆடி, தை, அமாவாசை நாட்களிலும் , மாதாந்திர கடைசி வெள்ளியிலும் , சனி கிழமையிலும் இத்திர்த்தகளில் நீராடி கைலாசநாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிடைக்கும்.
இக்கோயிலானது தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைத்துள்ளது. இங்கு ஸ்வாமியின் கைலாசநாதராகவும் அம்பாள் சிவகாமியாகவும் அருள் பாலிக்கின்றனர்.
கருவறை சுவர் அருகை பஞ்சலிங்கமும் , தென் மேற்க்க முலையில் கன்னி விநாயகரும் உள்ளனர். வட மேற்கில் சுப்ரமணிய ஸ்வாமி வள்ளி டைவணியோடு காட்சியளிக்கின்றனர்.
பிரகாரத்தில் சனீஸ்வரர் , சண்டேஸ்வரர் மட்டும் கால பைரவர் சிலை உள்ளது. கைலாசநாதர் கருவறையின் மேல் விமானம் உள்ளது. mU;spk
இக்கோயிலை காட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு மோட்சம் அளித்த இடமும் இதுவே. இதுவே சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையை கண்டு கவலையடைந்தான். தனது மகளுக்கு அமைத்துள்ள குதிரை முகம் மாற வேண்டி சிவா பெருமானை எண்ணி தவம் இருந்தான்.
சிவபெருமான் இவர் முன் தோன்றி முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் போய் நீராடுக என ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி சோழ மன்னன் தன் மகளோடு வந்து இங்குள்ள தீர்த்த கட்டத்தில் நீராடினான்.
உடனே சோழ மன்னனின் மகளது முகம் மனித முகமாக மாறியது. பின்னர் சிவபெருமானுக்காக சோழ மன்னன் இக்கோயிலை கட்டினான்.
பதினோராம் நுற்றாண்டில் விஜய நகர பேராசு சிறப்புற்று இருந்த காலம். பேராசர் கிருஷ்ண தேவராயருக்கு பின் அச்சுத தேவராயர் ஆட்சியும் ராமராயன் என்ற சித்தரசர் இருந்து வந்தார். அவருடைய தம்பி விட்டல்ராயன் தமிழக பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான்.
ஸ்ரீ கைலாசநாதர் கோயிலானது நான்கு மண்டபங்களை கொண்டுள்ளது. முதலில் உள்ள பந்தல் மண்டபத்தில் பாத்து தூண்கள் உள்ளது. பின்னர் ஊஞ்சல் மண்டபம் மணி மண்டபம் என்ற அமைப்புகளை கொண்டுள்ளது. அழகான கொடி மரமும் காணப்படுகிறது.
கோயில் பிரகாரத்தில் மாற வர்மன் சுந்தர பாண்டியன் காலத்து கல் வெட்டுகளும் முதலாம் வீர பாண்டியன் காலத்து கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன . இங்கு பிரதோஷம் மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
வியாழ பகவானே அனைத்து சக்திகளையும் இங்கே ஒருங்கே பெற்றுள்ளனர். சனீஸ்வர சன்னதி அருகேயும் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகேயும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்தால் நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
அனுமன் , கண்ணப்பர் , யானை , கோமாதா , மயில் , சிவலிங்க பூஜை செய்யும் அற்புதமான சிற்ப காட்சி அழகாக உள்ளது. காண கண் கோடி வேண்டும். கண் குளிர தரிசிப்போம்.