அருள்மிகு பொய்சொல்லா மெய்யன்சாஸ்தா திருக்கோயில், Tholappampannai - 628619, தூத்துக்குடி .
Arulmigu Poisollamaiyan Temple, Tholappampannai - 628619, Thoothukudi District [TM038268]
×
Temple History
தல வரலாறு
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இத்திருக்கோயில்
திருவைகுண்டம் பேரூந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் பொதிகை மலையில் தவழ்ந்து வரும் தாமிரபரணி வட பகுதியில் அமைந்துள்ளது.
முன்பு ஒரு காலத்தில் அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நகை ஆபரணங்களோடு
அவ்வழியாக போகும் போது இத்திருக்கோயிலில் வந்து தங்கி இருந்து செல்வார்கள். ஒரு நாள் இரவு தங்கும் போது திருடர்கள் வந்து அரசர் குடும்பத்தினரிடம் நகைகளை திருடி விட்டு சென்று விட்டனர். நகை திருடு போனது அறிந்து அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாஸ்தாவிடம் நாங்கள் உன்னை நம்பிதான் இங்கு வந்து தங்குவது உண்டு ...தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இத்திருக்கோயில்
திருவைகுண்டம் பேரூந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் பொதிகை மலையில் தவழ்ந்து வரும் தாமிரபரணி வட பகுதியில் அமைந்துள்ளது.
முன்பு ஒரு காலத்தில் அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நகை ஆபரணங்களோடு
அவ்வழியாக போகும் போது இத்திருக்கோயிலில் வந்து தங்கி இருந்து செல்வார்கள். ஒரு நாள் இரவு தங்கும் போது திருடர்கள் வந்து அரசர் குடும்பத்தினரிடம் நகைகளை திருடி விட்டு சென்று விட்டனர். நகை திருடு போனது அறிந்து அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாஸ்தாவிடம் நாங்கள் உன்னை நம்பிதான் இங்கு வந்து தங்குவது உண்டு அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கிழம்பும் போது ஒரு அசீறி ஒழித்தது என் ஆலயத்திற்கு வாருங்கள் வாருங்கள் என்று ஊரில் அனைவரும் ஒன்று கூடி திரண்டு திருக்கோயிலுக்கு வந்தனர். திருக்கோயில் முன் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில்தான் சாஸ்தா அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுப்பார்கள். அக்கிணறு தண்ணீர் நிரம்பி வழிந்து முட்டு அளவுக்கு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர். திருடர்கள் இருவரும் நாகம் தீண்டி இறந்து கிடந்தனர். அப்போது அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தன்னுடைய நகை ஆபரணங்களை விற்று அந்த பணத்தைக் கொண்டு வந்து 1987ம் ஆண்டு இத்திருக்கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனிஉத்திரம் 10 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும். 5ம் திருவிழாவான பெரியசாமி பூஜை மற்றும் 10ம் திருவிழாவான பூக்குழி பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். இது வருடா வருடம் நடைபெற்று வருகிறது.
தற்போது இத்திருகோவிலுக்கு வரும் பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கை
கூடியது அவர்களிடம் உபய வரவு பெற்றும், உண்டியல் காசு சேகரித்தும் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. சாஸ்தாவின் அருளால் குழந்தை வரம் வேண்டி வந்தவர்களுக்கு குழந்தை பாக்கியமும், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டுவன செல்வத்தையும் கொடுத்து அருள் பாளிக்கிறாள்.
சாஸ்தாவையும், பெரியசாமியையும் பத்தியோடு வழிபடுவோர்க்கு இம்மையில்
வறுமையும் பிணியும் நீங்கிச் செல்வத்தால் திளைத்து விளங்குவதுடன் மறுமையிலும் பெறுவதற்குரிய பேரின்பம் அடைவார்களென்பதற்கு ஐயமில்லை என்பது முதியோர் அனுபவ சித்தாந்தம்.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள் .... . . . . ஏக்கர் செண்டும், புஞ்சை நிலங்கள் . . . . . . . . . . . ஏக்கர் . . . . . . செண்டும் உள்ளன. திருக்கோயிலின் முன்பு கிணறு ஒன்று உள்ளது
திருக்கோயிலில் புதிய நந்தவனம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பிடமும் எல்லையும் :
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் நகர் மற்றும் வட்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள புதுக்குடி புகைவண்டி நிலையத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள திருவைகுண்டம் கிராமம் தோழப்பண்பண்ணை கிராமத்தில் இத்திருத்தலம் அமையப்பெற்று உள்ளது.