Screen Reader Access     A-AA+
அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம் - 629704, கன்னியாகுமரி .
Arulmigu Thanumalayan Temple, Suchindrum - 629704, Kanyakumari District [TM038367]
×
Temple History

இலக்கிய பின்புலம்

தலபெருமை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசிந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தொன்மையானது பழமை வாய்த்ததுமான திருக்கோயிலாகும்.இக்கோயில் தொடர்பாக நான்கு புராணக் கதைகள் உள்ளன. அவை (1) அத்திரி அனுசூயை கதை (2) இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதை (3) அறம் வளர்த்தம்மன் கதை மற்றும் (4) அம்மனுக்கு தாணுமாலய ஸ்வாமிக்கும் இடையே நடைபெறவிருந்த திருமணம் தடைப்பட்ட கதை ஆகியன. பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.வனவாசத்தின் போது இராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றான் என இராமயணம் கூறுகிறது.அத்திரியின் பத்தினி அனுசூயை.இத்தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை எனவே குழந்தை...