Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001, கன்னியாகுமரி .
Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001, Kanyakumari District [TM038401]
×
Temple History
தல வரலாறு
இரண்டு கருவறைகள்
நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஒலைவேய்ந்த கூறையால் ஆனது. இத்தகு அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்று தான் பழமை மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி . மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம் .இது சுயம்புவாக உருவானது என்பது ஐதிகம்.
அனந்தகிருஷ்ணன் கோயில் கருவறை அத்தராளம். அர்தமண்டபம் என அமைந்தது. அர்தமண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடலாம் . கருவறை தெய்வமான் அனந்த கிருஷ்ணன் தர்னேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிவம் . நின்ற கோலம் ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கிறார். இடுப்பிலிருந்து நாகம்...இரண்டு கருவறைகள்
நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஒலைவேய்ந்த கூறையால் ஆனது. இத்தகு அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்று தான் பழமை மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி . மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம் .இது சுயம்புவாக உருவானது என்பது ஐதிகம்.
அனந்தகிருஷ்ணன் கோயில் கருவறை அத்தராளம். அர்தமண்டபம் என அமைந்தது. அர்தமண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடலாம் . கருவறை தெய்வமான் அனந்த கிருஷ்ணன் தர்னேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிவம் . நின்ற கோலம் ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கிறார். இடுப்பிலிருந்து நாகம் தலைக்கு மேல் படத்துடன் நிற்கிறது. இவரின் இடது வலது பறங்களில் பத்மாவதி இம்பிகாபதி யட்சிகள் நின்ற கோலம் .முன்று தலை நாகம் இவர்களின் தலைக்கு மேல் உள்ளது. வலது கைமலர் இடது கை லோலாஹஸ்தம் இப்போது இவர்கள் பாமா ருக்மணி .
நாகராஜர் கருவறைக்கும் அனந்தகிருஷ்ணனின் கருவறைக்கும் இடைப்பட்ட சிறிய கோயிலின் சிவன் இருக்கிறார். இங்கு சிவன் ஆவுடையில் லிங்க வடிவில் இருக்கிறார். கல்படிமம் எதிரே நந்தி உண்டு.
பரிவார தெய்வங்கள்
இக்கோயிலில் எட்டுக்கு மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. அனந்தகிருஷ்ணன் மூலவர் ஆனாலும் நாகமும் மூலவராக கருதப்படுகிறார். சிவன் பரிவார தெய்வமே. இரு மூலவர்களை கொண்ட கோவில் இது.
தெற்கு வெளிபிரகாரத்தில் நாகமணி பூதத்தான் ஐந்து தலை நாகம் , ஒரு கலையில் கதை, ஜீவாலா மகுடம். இது காவல் தெய்வம். வடக்கு வெளிப்பிரகாரத்தில் சாஸ்தா கோயில். இது முழுவதும் புணரமைக்கப்பட்ட கோயில். சாஸ்தா அமர்ந்த கோலம் தலையில் கிரீடம், வலது கையில் செண்டு. உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி இருக்கிறார். அனந்தகிருஷ்ணன் கோயிலில் வேட்டைகிருஷ்ணன், வேட்டை அம்மன் சக்கரத்தாழ்வார் விநாயகர் ஆகியோரின் விழாப்படிமங்கள் உள்ளன.
கோயிலுக்கு வடக்கே நந்தவனமாக இருந்த பகுதியில் சிறுகோயில்கள் உள்ளன. இவை புதிதாக வந்தவை. வடபுரம் துர்க்கை அம்மன் கருவறை. சங்கு சக்கரம் தாங்கி நின்ற கோல கல் படிவம் . இக்கோயில் 1965 ல் நிறுவப்பட்டது. துர்க்கை அருகே பாலமுருகன் கோயில். இது 1979 ல் நிறுவப்பட்டது. முருகன் கோயில் தெற்கில் குழலூதும் கிருஷ்ணன் நிற்கிறார். தலைக்கு மேல் குடை.
தல பெருமை
இக்கோயிலுக்கு என்று தனியாக தலபுராணம் கிடையாது. இது சமணக் கோயிலாக இருந்தது. கி.பி 16-ம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளியாக இருந்த இக்கோயிலின் வழிபாட்டு பழமை பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை. கல்குளம் வட்டம் சிதறால் கோயில் ஒரு சமண ஸ்தலம். இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டுக்கு முன் உள்ளது .
ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குண வீரப்பாண்டியன் கமலவாக பண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்டு சமணர்கள் என தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சரியர்கள். இரு 500 ஆண்டுகளுக்கு முன்பு சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோயிலில இருந்திருக்கிறது. நாகர்...இக்கோயிலுக்கு என்று தனியாக தலபுராணம் கிடையாது. இது சமணக் கோயிலாக இருந்தது. கி.பி 16-ம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளியாக இருந்த இக்கோயிலின் வழிபாட்டு பழமை பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை. கல்குளம் வட்டம் சிதறால் கோயில் ஒரு சமண ஸ்தலம். இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டுக்கு முன் உள்ளது .
ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குண வீரப்பாண்டியன் கமலவாக பண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்டு சமணர்கள் என தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சரியர்கள். இரு 500 ஆண்டுகளுக்கு முன்பு சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோயிலில இருந்திருக்கிறது. நாகர் வழிபாடு கதைகள் அப்போதே பரவலாயிருக்கலாம் . இந்த நாகராஜா பற்றிய சமண கதைகள் உண்டு.
சமணத்தின் 23 ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இவருக்கு பிறவிகள் தோறும் துன்பம் அளித்தவன் சமடன். இவன் கடைசி பிறைவியில் மகிபாலன் என்னும் பெயரில் பிறக்கிறான். அப்போது பாசுவநாதருக்கு தாத்தா முறை. மகிபாலன் ஒரு மரக்கட்டயை நெருப்பிலிட்டான். பார்கவநாதனாக இருந்த சிறுவன் அந்த கட்டையில் இரு பாம்புகள் உள்ளன. அவற்றை நெருப்பில போடாதே என்கிறான். ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. அதலால் பாம்புகள் இறக்கின்றன. பார்சுவன் ஓதிய மந்திர மகிமையால் ஆண்பாம்பு நாகராஜவாகவும் (தர்ணேந்திரன்) பெண் பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி ) பிறக்கின்றனர்.
தீர்த்தங்காரர்கள் ஒவ்வொருவரும் யட்சனும் யட்சியும் பணிவிடையாளர்களாக இருப்பர். பார்சுவநாதருக்கு தர்ணேந்திரனும் பத்மாவதியும் யட்சனும் யட்சியுமாக இருந்தனர். என்பது ஸ்ரீபுராணம். இதன்படி இக்கோயில் தெற்கு கருவறையில் இருப்பது தர்ணேந்திரன். நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு கல் வெட்டு (கி.பி.1588) கருங்குள வறநாட்டு கும்பிளத்து திருக்குருகை பெருமாள் இக்கோயிலுக்கு நிபந்தம் கொடுத்துள்ளார். இந்த கல்வெட்டில் தார்வனந்தாள்வார் உன்ற பெயர் முதலில் வருகிறது.
அனந்தன் ஆதிஷேனின் பெயர். இவன் ஆயிரம் தலைகளை உடையவன் .பார்சுவநாதர் புராணத்தில் இடம் பெறும் ஆயிரம் தலைகளை உடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிஷேசன்.
இதனால் இக்கோயில் வைணவ கோயில் ஆனது. 1 643- ஆம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலை ஸ்ரீகிருஷ்ணன் கோயில் எனக் கூறும். இப்போது முலவரின் எதிரே உள்ள கொடி மரத்தின் பட்டத்தில் ஆமை படம் இடம் பெறுகிறது. ஆமை கொடி நாகராஜருக்கு பலராமனின் கொடியிலும் ஆமை இருக்கும் . எனவே இக்கோயிலின் மூல புரணமாக சமணத்தின் ஸ்ரீ புராணத்தையும் இந்துக்களின் பாகவதத்தையும் கொள்ளலாம்.
இந்த கோயில் கட்டுமானம் தொடர்பாக ஒரு கதை வழங்குகிறது. இக்கோயிலை முதலில் வைஷ்ணவ கோயிலாக கட்ட ஆரம்பித்தவன் சிறைவாய் மூத்த தம்புரான் ஆன ஜெயதுங்க நாட்டு சங்கரநாராயணர் வென்று மண்கொண்ட பூதலவீர உதய மார்தாண்டன் என்பவன் ஆவான். இவன் சோழகுல வல்லிபுரம் என்ற களங்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநாராக கொண்டு தன் புதிய அரண்மனையில் இருந்து வேணாட்டை ஆண்டவன்.(1516 முதல் 1585 வரை)
இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும வியாதி வந்தது. தொழுநோய் உன ஒரு வைத்தியன் சொன்னான்.மன்னன் தன் உடலைப் பட்டால் மூடிக்கொண்டுதான் அமைச்சர்களையே சந்தித்தான்.சோதிடர்கள் அவனது சரும வியாதி நாகதோஷத்தால் வந்தது நாஞ்சில் நாட்டு நாகராஜகோயிலில் வழிபட்டால் இந்த வியாதி தீரும் என்றான். மன்னனும் அப்படியே செய்தான்.. இந்தக் கோயிலின் தலவிருட்சகம் என்று கூறப்படும் ஒடவள்ளி செடியைத் தன் உடம்பில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் இக்கோயிலின் இருந்தான்.இவன் இக்கோயிலில் சில பகுதிகளைக் கட்டினான் என்பதும் ஒரு கதை.