அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கே.கே.நகர், சென்னை - 600078, சென்னை .
Arulmigu Muthu Mariyamman Temple, K.K.Nagar, Chennai - 600078, Chennai District [TM000415]
×
Temple History
தல வரலாறு
தற்போதுள்ள திருக்கோயில் காலி நிலமாக இருந்த காலத்தில் அங்கு ஒரு புற்று இருந்ததாகவும், அதில் பாம்பு இருந்ததாகவும், இத்திருக்கோயிலில் பரம்பரை தர்மகர்தா திருமதி. சரோஜனி சீனிவாசன் அவர்கள் கனவில் அவர்களின் குலதெய்வம் முத்துமாரியம்மன் தொன்றி அங்கு தான் நிரந்தரமாக தங்கவுள்ளதாகவும் அருள்பாலித்ததால் அங்கு ஒரு தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. மேற்படி புற்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளால் பூஜிக்கப்பட்டது. அதற்கு பிறகு அங்குள்ள அம்பாள் சிலை நிறுவப்பட்டது. காலப்போக்கில் பொது மக்கள் மேற்படி இடத்திற்கு வருகைத் தந்து அவர்கள் குறையை அம்பாள் தீர்த்துள்ளதால் சுற்று வட்டாரத்தில் இத்திருக்கோயிலில் பெயர் பிரபலமாகியது. அதற்குப் பிறகு 30.08.1990ம் ஆண்டில் திருப்பணிகள் முடிவுற்று முதல் கும்பாபிஷேகம் நடைபெற்று காலப்போக்கில் இத்திருக்கோயிலில் முத்துமாரியம்மன் சன்னதி தவிர விநாயகர் சுப்ரமணியர் ....தற்போதுள்ள திருக்கோயில் காலி நிலமாக இருந்த காலத்தில் அங்கு ஒரு புற்று இருந்ததாகவும், அதில் பாம்பு இருந்ததாகவும், இத்திருக்கோயிலில் பரம்பரை தர்மகர்தா திருமதி. சரோஜனி சீனிவாசன் அவர்கள் கனவில் அவர்களின் குலதெய்வம் முத்துமாரியம்மன் தொன்றி அங்கு தான் நிரந்தரமாக தங்கவுள்ளதாகவும் அருள்பாலித்ததால் அங்கு ஒரு தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. மேற்படி புற்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளால் பூஜிக்கப்பட்டது. அதற்கு பிறகு அங்குள்ள அம்பாள் சிலை நிறுவப்பட்டது. காலப்போக்கில் பொது மக்கள் மேற்படி இடத்திற்கு வருகைத் தந்து அவர்கள் குறையை அம்பாள் தீர்த்துள்ளதால் சுற்று வட்டாரத்தில் இத்திருக்கோயிலில் பெயர் பிரபலமாகியது. அதற்குப் பிறகு 30.08.1990ம் ஆண்டில் திருப்பணிகள் முடிவுற்று முதல் கும்பாபிஷேகம் நடைபெற்று காலப்போக்கில் இத்திருக்கோயிலில் முத்துமாரியம்மன் சன்னதி தவிர விநாயகர் சுப்ரமணியர் . சிவன், பெருமாள். ஆஞ்சநேயர், பிரத்தியங்கிரா, நவகிரகங்கள் போன்ற சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு பலதரப்பட்ட மக்கள் வழிபடும் ஸ்தலமாக உருவெடுத்துள்ளது. அதற்குப் பிறகு 09.07.2009 அன்று இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.