Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், Kumaradiapuram - 628902, தூத்துக்குடி .
Arulmigu Balasubramaniyasamy Temple, Kumaradiapuram - 628902, Thoothukudi District [TM041702]
×
Temple History

தல வரலாறு

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி தற்பொழுது ஆலயம் அமைந்துள்ள இடத்தின் வழியாக பால் செம்பை கொண்டுவரும் போது தினமும் தானாகவே சிந்தி விழுந்தது . இதைக்கண்டு ஊர் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை தோன்றியது . அயோத்திரெட்டி வழி தோன்றிய ஆன்மீகப் பெரியவர் பால் வண்ணரெட்டியார் என்பவர் கனவில் பால் முகம் மாறாத பாலகன் வடிவில் முருகன் தோன்றி சிறிய வேல் , விபூதி கொப்பறையுடன் சிறு பூஜை மணியும் புதைந்து இருப்பதாகவும் அவ்விடம் அதனை எடுத்தால் அஃது ஓர் சிறப்புற்ற ஆலயம் ஆகும் எனக்கூறி மறைந்தார் . இதனை ஊர் மக்களிடம் எடுத்துக்கூறி மேற்படி இடத்தை தோண்டிப்பார்க்கையில் கனவில் கூறிய பொருள்கள் அனைத்தும் இருப்பது கண்டு...