தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்பள்ளி அருள்மிகு லெட்சுமி நாராயாணப்பெருமாள் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதன் திருக்கோயில் சுற்றி இருக்கும் மக்களால் பெரிதும் சிறப்பிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலை தரிசித்து வழிபட்டு வலம் வருபவர்கள் இறைவன் அருளுடன் மன அமைதியையும் பெறுவர் என்பதை இன்றும் அனுபவ பூர்வமாக காணலாம்.இத்திருக்கோயிலை வழிபட்டு வருபவர்களுக்கு மனத்திலும், அறிவிலும், உடலிலும், தெளிவும், ஆரோக்கியமும், உற்சாகமும் அபரிமிதமாக பெருகும். அதோடு உரிய சகல குணங்களையும், செல்வங்களும் கொழிக்கும்.