மலைகள் சூழ்ந்த பிரதேசமாகிய கிருஷ்ணகிரியில், மகாலட்சுமி தாயர் தவமிருந்து புனிதப்படுத்திய புண்ணிய பூமியில் முன்பு காடுகள் மண்டியிருந்தன. இக்காடுகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள இடைச்சிறுவர்களின் வழக்கம். இச்சிறுவர்களில் ஒருவனது ஒரு பசுமாடு மட்டும் தினசரி அடர்ந்த கானகத்தின் ஊடே செல்வதும், பால் வடிந்த மடியுடன் திரும்புவதும் இடையனை கலவரப்படுத்தியது. இதன் காரணம் அறிய ஒருநாள் பசுமாட்டினை தொர்ந்து சென்ற சிறுவன் கண்ட காட்சி அவனை திகைப்பில் ஆழ்த்தியது, ஓங்கி வளர்ந்த புற்றின் மீது தானாக பால் சுரக்க அவனது மாடு தெய்வீக அமைதியுடன் நின்றிருந்தது. இதனை கண்ட சிறுவன் திரும்ப ஓடிவந்து ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க, அது சமயம் அசரீரி மூலம் வெங்கடரமண சுவாமி சுயம்பு வடிவில் புற்றினுள் எழுந்தருளியிருப்பது...மலைகள் சூழ்ந்த பிரதேசமாகிய கிருஷ்ணகிரியில், மகாலட்சுமி தாயர் தவமிருந்து புனிதப்படுத்திய புண்ணிய பூமியில் முன்பு காடுகள் மண்டியிருந்தன. இக்காடுகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள இடைச்சிறுவர்களின் வழக்கம். இச்சிறுவர்களில் ஒருவனது ஒரு பசுமாடு மட்டும் தினசரி அடர்ந்த கானகத்தின் ஊடே செல்வதும், பால் வடிந்த மடியுடன் திரும்புவதும் இடையனை கலவரப்படுத்தியது. இதன் காரணம் அறிய ஒருநாள் பசுமாட்டினை தொர்ந்து சென்ற சிறுவன் கண்ட காட்சி அவனை திகைப்பில் ஆழ்த்தியது, ஓங்கி வளர்ந்த புற்றின் மீது தானாக பால் சுரக்க அவனது மாடு தெய்வீக அமைதியுடன் நின்றிருந்தது. இதனை கண்ட சிறுவன் திரும்ப ஓடிவந்து ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க, அது சமயம் அசரீரி மூலம் வெங்கடரமண சுவாமி சுயம்பு வடிவில் புற்றினுள் எழுந்தருளியிருப்பது தெரிய வந்தது. திருக்கோயில் கட்ட உத்தரவு பெற்று, பணிகளை துவக்கும் போது மகாலட்சுமி தாயாரின் சுயம்புத் திருமேனியும் கண்ணுறப் பெற்றார்கள். கோவிந்தராஜ பெருமாளும், மகாலட்சுமி தாயாரும் ஒரே ஸ்தலத்தில் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருப்பது இப்பூதலத்தில் எங்கிலும் இல்லாத அரிய நிகழ்வாகும்.