வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி ஈசான்ய பாகம் தாழ்ந்த கிழக்கு பாகத்தில் குளமும், வடக்கு திசையில் ராமக்காள் ஏரியும் உள்ளது. கிழக்கு வாசலில் இராஜகோபுரம் மிகவும் பெலிவுடன் உயர்ந்தும் காணப்படுகிறது. மேற்கு வாசல் கோபுரம் உயர்ந்தும் காணப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு நுழையும் போது சிறிய தேரும், பெரிய தேரும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கிறது.
ஆதியில் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பூண்டி கலசப்பாக்கம் என்னும் ஊரில் வசித்து வந்தவர்களும் திருவண்ணாமலையை ஆண்ட வள்ளால மகராஜாவின் மெய்காவல் படையைச் சார்ந்த கைக்கோலப்படையினரான ஆறு குடும்பங்கள் தருமபுரியில் உள்ள குமாரசாமிப்பேட்டைக்கு காவடியுடன் வந்திறங்கி சதுர்முகவேல் நட்டுஇத்திருக்கோயிலை ஸ்தபித்தனர். மோழவீட்டு முருக முதலியாரால்ஸ்தாபிக்கப்பட்ட இத்திருக்கோயில் மூலஸ்தானம் முதல் கொடி மண்டபம் வரை அவர் வழியினரான திரு.நஞ்சப்பமுதலியார்,...வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி ஈசான்ய பாகம் தாழ்ந்த கிழக்கு பாகத்தில் குளமும், வடக்கு திசையில் ராமக்காள் ஏரியும் உள்ளது. கிழக்கு வாசலில் இராஜகோபுரம் மிகவும் பெலிவுடன் உயர்ந்தும் காணப்படுகிறது. மேற்கு வாசல் கோபுரம் உயர்ந்தும் காணப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு நுழையும் போது சிறிய தேரும், பெரிய தேரும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கிறது.
ஆதியில் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பூண்டி கலசப்பாக்கம் என்னும் ஊரில் வசித்து வந்தவர்களும் திருவண்ணாமலையை ஆண்ட வள்ளால மகராஜாவின் மெய்காவல் படையைச் சார்ந்த கைக்கோலப்படையினரான ஆறு குடும்பங்கள் தருமபுரியில் உள்ள குமாரசாமிப்பேட்டைக்கு காவடியுடன் வந்திறங்கி சதுர்முகவேல் நட்டுஇத்திருக்கோயிலை ஸ்தபித்தனர். மோழவீட்டு முருக முதலியாரால்ஸ்தாபிக்கப்பட்ட இத்திருக்கோயில் மூலஸ்தானம் முதல் கொடி மண்டபம் வரை அவர் வழியினரான திரு.நஞ்சப்பமுதலியார், திரு.பச்சியப்பமுதலியார், திரு.மந்திரி முருக முதலியார், திரு.நாராயணமுதலியார், திரு.முனுசாமிமுதலியார் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டு 1972-ல் திரு.முனுசாமி முதலியார் மகன் பழனிசாமி முதலியாரால் மூலவர் விமானம் புதுப்பிக்கப்பட்டது. நல்லபெருமமுதலி மனைவி திருமதி.பழனியம்மாள் அவர்களால் 1914ல் இராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது.
திருமகள் உறையுளாம் தகடூர் என்றழைக்கப்பட்ட தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் மான்மகளும், வான்மகளும் வலம் இடம் மேவ சிவசுப்ரமணியர் என்னும் பெயர் தாங்கி எல்லாம் வல்ல முருகப்பெருமான் இடபுறமாக திரும்பபி நின்ற மயில் மீது வீற்றிருந்து அருள் புரிகின்றார். இத்திருத்தலத்தில் அதிசயங்கள் அனேகம் உண்டு. இத்தலம் சாபானுகிரகம் பெற்ற காசிவாசி சிவானந்த சாமி, நிர்வாண சாமி போன்ற மகான்கள் வாழ்ந்தது, ஜெயகணேஷ மகா சித்தர் ஜீவ சமாதி அடைந்தது போன்ற பெருமைமிக்க ஸ்தலம் இது. அம்மகான்களால் சின்ன பழனி என்னும் சிறப்பு பெயர் தாங்கி தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காவடி கொண்டு வந்த ஸ்தாபித்த வள்ளல் வையாபுரி சுவாமிகளின் காருண்யத்தால் பெரும் மதிப்புடைய சொத்துக்கள் உள்ள பெருமை மிக்க ஸ்தலமாகும்.
கலியுகமகானாய் விளங்கி கந்தனோடு இரண்டர கலந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இது என் தாய்வீடு என்று அன்புடன் அழைத்த ஊர் இது.