தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைமிக்கதாக அறிய முடிகிறது. தொடக்க காலத்தில் ஆதி திராவிடர் சமூகத்திற்கு சொந்தமான திருக்கோயிலாக இருந்து வந்துள்ளது. தந்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இணை ஆணையர் சென்னை மண்டலம் -1 ஆளுமையின் கீழ் உள்ளது. இத்திருக்கோயில் நிர்வாகம் புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராக கொண்டும், செயல் அலுவலர் ஒருவரை கொண்டும் இவ்வாலயத்தை நிர்வகித்து வருகிறார்கள்.