அருள்மிகு பழந்தியம்மன் கோயில், ஆதம்பாக்கம், சென்னை - 600088, செங்கல்பட்டு .
Arulmigu Pazhandiamman Temple, Athampakkam, Chennai - 600088, Chengalpattu District [TM000666]
×
Temple History
தல வரலாறு
ஆதம்பாக்கம் 100 வருடங்களுக்கு முன் ஆதம்பாக்கத்தில் சேர்ந்த மக்கள் கிணற்றுத் தண்ணீர் எடுக்கும் போது திடீரென ஒரு அம்மன் சிலை கிணற்றில் பூமியிலிருந்து கருங்கல்லால் ஆன மாரியம்மன் விக்ரகம் ஒன்று கிடைத்தது.
பழமையான விக்ரகம் என்பதால் பழமையான அம்மன் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் பழண்டியம்மன் என மருவி கிராம தேவதையாக வழிபடுகின்றார்கள். ஆலயத்தில் நுழையும்போது பெரிய திரிசூலமும் பலிபீடமும் உள்ளன. அம்மனின் இருபுறமும் விநாயகரும் பாலமுருகனும் கோயில் கொண்டுள்ளனர். தேவியின் சன்னதிக்கு மேல் கஜலட்சுமி சுதை சிற்பமாக அருள்புரிகிறாள்.
கோயில் மண்டப 10 இடங்களில் ஸ்ரீ சக்கரம் காளியம்பாள் சமயபுரம் மாரி போன்ற தேவியர்களும் ஓவியங்களும் சுற்றி சுவர்களின் பல்வேறுவகையான தேவ தேவியரின் திருவுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.
பிரகாரத்தில் தேவியின் பின்புறம் புற்று உள்ளது ஆடி தை வெள்ளிக்கிழமைகளில்...ஆதம்பாக்கம் 100 வருடங்களுக்கு முன் ஆதம்பாக்கத்தில் சேர்ந்த மக்கள் கிணற்றுத் தண்ணீர் எடுக்கும் போது திடீரென ஒரு அம்மன் சிலை கிணற்றில் பூமியிலிருந்து கருங்கல்லால் ஆன மாரியம்மன் விக்ரகம் ஒன்று கிடைத்தது.
பழமையான விக்ரகம் என்பதால் பழமையான அம்மன் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் பழண்டியம்மன் என மருவி கிராம தேவதையாக வழிபடுகின்றார்கள். ஆலயத்தில் நுழையும்போது பெரிய திரிசூலமும் பலிபீடமும் உள்ளன. அம்மனின் இருபுறமும் விநாயகரும் பாலமுருகனும் கோயில் கொண்டுள்ளனர். தேவியின் சன்னதிக்கு மேல் கஜலட்சுமி சுதை சிற்பமாக அருள்புரிகிறாள்.
கோயில் மண்டப 10 இடங்களில் ஸ்ரீ சக்கரம் காளியம்பாள் சமயபுரம் மாரி போன்ற தேவியர்களும் ஓவியங்களும் சுற்றி சுவர்களின் பல்வேறுவகையான தேவ தேவியரின் திருவுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.
பிரகாரத்தில் தேவியின் பின்புறம் புற்று உள்ளது ஆடி தை வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் ஊற்றி அன்பர்கள் வழங்குகின்றன 6 அடி உயரம் ஐந்து தலை நாகம் சிற்பமும் கணபதி சிவன் நாகர் சிலைகள் நந்தி ஆகியோர் புற்றின் அருகில் அருள்கின்றனர். சுற்று மதிலின் பக்கவாட்டில் அஷ்டலட்சுமிகளும் சிற்ப வடிவில் அருள்பாலிக்கின்றனர்.பழண்டி அம்மன் பட்டாடை அணிந்து எலுமிச்சம்பழம் மாலை சூடி நந்து புல்லாக்கு அட்டிகை போன்ற ஆபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரம் விதையாய் காட்சியளிக்கின்றன தேவிக்கு வலதுபுறம் பஞ்சலோகத்தில் நான்கடி உயரம் திரிசூலம் உள்ளது இறைவி உற்சவத் திருமேனி அருள் மழை பொழிகிறது.