அருள்மிகு கற்கோடியம்மன் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சென்னை - 600034, சென்னை .
Arulmigu Karkodiamman Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000072]
×
Temple History
தல வரலாறு
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்திருந்த பூசாரி அவர்தம் வழிபாட்டில் பூஜையிலிருந்து இந்த அம்மன் சிலையை இங்கு வைத்து வழிபட ஆரம்பித்தார். கல்லையும் உருக்கும் களந்த நெஞ்சம் படைத்த அம்மன் என்ற பெயர் நாளடைவில் கல் நெஞ்சம் படைத்த அம்மனாகி பின்னர் கற்கோடியம்மன் என பெயர் பெற்றது.தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நன் சிலையும் அஞ்சு அம்பும் மிக்கு அலராகி நின்றேல் அறிவார் எனினும் பஞ்சு அஞ்சம் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே என்று பாடியுள்ளார் பிராமிபட்டர். அதன்படி நெஞ்சத்துள் உருகி இவ்வம்மனை தொழுபவர்க்கு அனைத்து நலன்களும் கை கூடும் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.நூறு ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த மக்களை வாந்தி...சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்திருந்த பூசாரி அவர்தம் வழிபாட்டில் பூஜையிலிருந்து இந்த அம்மன் சிலையை இங்கு வைத்து வழிபட ஆரம்பித்தார். கல்லையும் உருக்கும் களந்த நெஞ்சம் படைத்த அம்மன் என்ற பெயர் நாளடைவில் கல் நெஞ்சம் படைத்த அம்மனாகி பின்னர் கற்கோடியம்மன் என பெயர் பெற்றது.தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நன் சிலையும் அஞ்சு அம்பும் மிக்கு அலராகி நின்றேல் அறிவார் எனினும் பஞ்சு அஞ்சம் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே என்று பாடியுள்ளார் பிராமிபட்டர். அதன்படி நெஞ்சத்துள் உருகி இவ்வம்மனை தொழுபவர்க்கு அனைத்து நலன்களும் கை கூடும் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.நூறு ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த மக்களை வாந்தி பேதி காலரா மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் மலிந்திருந்த காலத்தில் இந்த அம்மனை தொழுது வழிபட்டு அருள்பெற்று தத்தம் துயர் நோய் நீங்கி இன்புற்றோர் ஏராளம். அம்மக்கள் தம்மால் முடிந்த காணிக்கையைத்தர அப்பொருள் மூலம் இத்திருக்கோயில் முதலில் கட்டப்பட்டது.