அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், உப்பிலிபாளையம், கோவை - 641018, கோயம்புத்தூர் .
Arulmigu Dhandumariamman Temple, Uppilipalayam, Coimbatore - 641018, Coimbatore District [TM009766]
×
Temple History
தல பெருமை
கோவை வாழ் மக்களால் தன் குறை நீங்க குலதெய்வமாக போற்றி வணங்கப்படும் தண்டுமாரி அன்னையின் வரலாறு
கோவையின் மறுமலர்ச்சி
வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அது போல் மைசுர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான். அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள் மழை பொழியத் தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள். ஆனால் அன்னையின் காலம் வரையறுக்கப்படவில்லை,
தண்டு
தண்டு எனும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு...கோவை வாழ் மக்களால் தன் குறை நீங்க குலதெய்வமாக போற்றி வணங்கப்படும் தண்டுமாரி அன்னையின் வரலாறு
கோவையின் மறுமலர்ச்சி
வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அது போல் மைசுர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான். அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள் மழை பொழியத் தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள். ஆனால் அன்னையின் காலம் வரையறுக்கப்படவில்லை,
தண்டு
தண்டு எனும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள் . மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாபி என சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதி வடநாட்டுக்கு படையெடுத்துச் சென்று வென்ற செய்தியைக் கூறும் பொழுது சேக்கிழார் பெரிய புராணத்தில் இச்சொல்லை சிறப்பித்துக் காட்டினார். இந்த தண்டு எனும் சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது.கோவை, அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி , முப்பெருந் தேவியாய் , அகிலாண்ட நாயகியாய் , ஆதிபராசக்தியாய் , சாந்த சொரூபிணியாய் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகின்றாள்.
படைவீரர்களுக்கு கனவில் அருளாட்சி
திப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில் எண்ணற்ற வீரர்கள் படையில் இருந்தனர். ஆனால் அவள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு வீரனுக்கு அன்னை கனவில் அருளாட்சி செய்யத் தொடங்கினா. கண்ணுக்கும் , கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன் கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாக கூறினாள்.
வேப்ப மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் இடையில் நீர்சுனைக்கு அருகில் அமைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன் மறுநாள் எழுந்து அதிகாலையில் விரைவாக ஆவலுடன் தேடினான், வேப்பமரத்தின் கிளைகளைத் தன் கைகளால் விலக்கிப் பார்த்த பொழுது பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான். பின்னர் தன் கண்கள் இன்புற்றதோடு மட்டுமல்லாமல் கையெடுத்து தொழ ஆரம்பித்தான். அவன் அடைந்த இன்பத்திற்கு எல்லையின்றி அமையவே கூத்தாடி மகிழ்ச்சியுற்றான். பின் அனைத்து படைவீரர்களுக்கும் , நண்பர்கள், உறவினர்களுக்கும் நம அன்னையே கோவையின் காவியத் தலைவியாய் பறைசாற்றத் தொடங்கினான். நல்ல நாள் பார்த்து சிறு மேடை அமைத்து அம்மேடை மீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான். இங்ஙனம் எழுந்தருளிய நம் அன்னை தண்டுமாரி கோவையில் கொலு வீற்றிருக்கும் செய்தி எல்லா இடங்களிலும் எல்லோரிடத்திலும் பேசப்பட்டது. படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரி தண்டுமாரி என அழைக்கப்பெற்றாள். பசியும் , பிணியும் நீங்கி அன்னையை எண்ணி வழிபட்ட பக்தகோடி பெருமக்கள் எண்ணிக்கை நாளும் பெருகியது. அன்னையின் புகழ் அகிலமெங்கும் எதிரொலித்தது.