அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், Sulakkal - 642110, கோயம்புத்தூர் .
Arulmigu Mariyamman Vinayagar Temple, Sulakkal - 642110, Coimbatore District [TM009775]
×
Temple History
தல வரலாறு
சூலக்கல் முன்னர் அடர்ந்த வனப்பகுதியாகவும், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆடு மாடுகளுக்கு மிகச் சிறந்த மேய்ச்சல் பகுதியாகத் இருந்துள்ளது. அடர்ந்த இந்த வனப்பகுதியில் இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைப்பது வேலைக்கார பையன்கள் செய்து வரும் வேலை ஆகும். அவ்வாறு ஆநிரை மேய்த்து வரும் நாளில், பசுக்களின் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை மிகக் கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால் ஒருநாற் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு பசுக்களை விரட்டியுள்ளனர். அப்போது பசுக்கள் மிரண்டு...சூலக்கல் முன்னர் அடர்ந்த வனப்பகுதியாகவும், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆடு மாடுகளுக்கு மிகச் சிறந்த மேய்ச்சல் பகுதியாகத் இருந்துள்ளது. அடர்ந்த இந்த வனப்பகுதியில் இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைப்பது வேலைக்கார பையன்கள் செய்து வரும் வேலை ஆகும். அவ்வாறு ஆநிரை மேய்த்து வரும் நாளில், பசுக்களின் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை மிகக் கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால் ஒருநாற் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு பசுக்களை விரட்டியுள்ளனர். அப்போது பசுக்கள் மிரண்டு ஓடியுள்ளன. அவ்வாறு ஓடிய பசுக்களில் ஒரு பசுவின் கால்பட்டு, சுயம்பு பின்னப்பட்டது. பின்னப்பட்ட அவ்விடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. அந்த சுயம்பு வடிவக் கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டனர். அவ்விடத்தில் பெண் தெய்வம் ஒன்று எழுந்தருளி உள்ளாள் என்று உணர்ந்த அவர்கள் அனைவரும் அவர்களின் இல்லம் சென்று சேர்ந்தனர். அன்று இரவு பசுவின் சொந்தக்காரர் கனவில் அம்பிகை தோன்றி சுயம்புவாகத் தோன்றியுள்ள தான்தான் மாரி என்றும், சுயம்புவைச் சுற்றிக் கோயில் அமைத்து வழிபடுமாறும் கட்டளை இட்டுள்ளாள். பசுவின் கால் பதிந்த அந்த அடையாளம் இன்னும் சுயம்புவில் நன்கு தெரிவதை அபிஷேகம் செய்யும்போது பார்க்கலாம். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் சூலக்கல் என்று ஆயிற்று. அவ்விடத்தில் மாரி உறைவதால் சூலக்கல் மாரி என்று பெயர் பெற்றது. ஊர்ப்பெயரும் சூலக்கல் என்றாயிற்று.அவ்வாறே சுயம்புவை மையாக வைத்துக் கருவறையும், மகா மண்டபமும் கருங்கல்லால் அமைத்தனர். அருகாமையில் அம்பிகை புதல்வன் விநாயகருக்கும் தனிச் சந்நிதி அமைத்தனர். தினசரி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தனர். இன்று கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.