ஆலய வரலாறு
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான்.
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து...ஆலய வரலாறு
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான்.
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது. அப்படியிருக்க கிருஷ்ணராஜ உடையாருக்கும் அவரது துணைவியாருக்கும் நீண்ட காலமாக பெயர் சொல்ல பிள்ளையில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது.
இத்தருணத்தில் கோவை நகர் பகுதிக்கு மஹாராஜாவும், துணைவியாரும் திக் விஜயம் செய்ய வந்திருந்த போது குழலூதும் கண்ணன் மன்னனின் கனவிலே ஜோதி ரூபமாக தோன்றி தன் அமைவிடத்தை சுட்டிக்காட்டி தனக்கு சன்னதி உண்டாக்கினால்
உனக்கு சந்ததி வரும் என அரசனுக்கு ஆணையிட்டான் அனைத்து உலக நாயகன்.
எம்பெருமானது திருவாக்கினை மெய்பிக்கும் வண்ணம் கிருஷ்ணராஜ உடையார் தற்போது உள்ள இடத்திலே தங்களது குலதெய்வமான ஸ்ரீ வேணுகோபாலனுக்கு திருப்பந்தன் செய்ய தனது சேனாபதியான சங்கரய்யன் என்பவர்க்கு ஆணைகள் பிறப்பித்தார். திருக்கோயிலும் அமைந்தது. மன்னனுக்கு நீண்டநாள் ஏக்கமாகியமழலைச் செல்வமும் மடியிலே தவழ்ந்தது.
திருக்கோயில் நடைமுறைகளை மேற்பார்வை செய்து வர கூரத்தாழ்வாரின் குமாரரான வேதவியாஸபட்டர் வம்சத்தவர்களை ஸ்தலத்தாராக நியமித்து அக்ரகார சாமக்குளம் எனும் பகுதியிவை திருக்கோயிலுக்கு மானியமாக வழங்கினார். அன்று தொட்டு இதுகாரும் திருக்கோயிலில் அன்றாட பூஜைகளும், திருவிழாக்களும் சிறப்புற நடந்தேறி வருகின்றன.