பலப்பல வளப்பங்களை தன்னிடத்திற்கொண்டதுமாகி விளங்கும் கொங்கு மண்டலத்தின் புகழ்சேர் பொள்ளாச்சி திருநகருக்கு அணிகலனாக விளங்குவது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலாகும்.
பல தெய்வீக வளங்களோடு வளர்ந்தோங்கி வருகின்ற இத்திருக்கோயில் பல மகிமைகளை உள்ளடக்கியதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியை உடையது. இத்திருமேனியை நாக தேவதை நாள்தோறும் வந்து வணங்கி செல்லும் சிறப்பை உடையது. தினமும் பாலாபிஷேகம் நிகழ்வுறும் வியப்பை உடையது.
பூமி மட்டத்திலிருந்து 7 அடி உயரத்தில் கட்டப்பட்ட நூதன கருவறை முழுதும் கல்ஹாரமாகும். கருவறை விமானம் நாகரம் என்னும் நீள்சதுர வடிவில் மூன்று நிலையும், மூன்று ஸ்தூபிக் கலசங்களையும் உடையது.
அர்த்தமண்டபத்தின் முன்வாயில் நிலையில் அஷ்ட சக்திகளின் திருமேனி பொறிக்கப்பட்டுள்ளது. கருவறை முதல் திருச்சுற்றின் கிழக்கு திக்கில் மகேஸ்வரியும்,...பலப்பல வளப்பங்களை தன்னிடத்திற்கொண்டதுமாகி விளங்கும் கொங்கு மண்டலத்தின் புகழ்சேர் பொள்ளாச்சி திருநகருக்கு அணிகலனாக விளங்குவது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலாகும்.
பல தெய்வீக வளங்களோடு வளர்ந்தோங்கி வருகின்ற இத்திருக்கோயில் பல மகிமைகளை உள்ளடக்கியதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியை உடையது. இத்திருமேனியை நாக தேவதை நாள்தோறும் வந்து வணங்கி செல்லும் சிறப்பை உடையது. தினமும் பாலாபிஷேகம் நிகழ்வுறும் வியப்பை உடையது.
பூமி மட்டத்திலிருந்து 7 அடி உயரத்தில் கட்டப்பட்ட நூதன கருவறை முழுதும் கல்ஹாரமாகும். கருவறை விமானம் நாகரம் என்னும் நீள்சதுர வடிவில் மூன்று நிலையும், மூன்று ஸ்தூபிக் கலசங்களையும் உடையது.
அர்த்தமண்டபத்தின் முன்வாயில் நிலையில் அஷ்ட சக்திகளின் திருமேனி பொறிக்கப்பட்டுள்ளது. கருவறை முதல் திருச்சுற்றின் கிழக்கு திக்கில் மகேஸ்வரியும், தெற்கு திக்கில் கெளமாரியும், மேற்கு திக்கில் வைஷ்ணவியும் நின்ற கோலத்தில் திருமேனி கொண்டுள்ளனர்.
இதன் தெற்குச்சுற்றில் சிவலிங்கமும், இரு நாகதேவதையும் திருச்சந்நதி கொண்டுள்ளனர்.
இத்திருக்கோயிலின் விசாலமான அழகிய மகாமண்டபத்தின் கீழ்தளம் ஆழ்நிலை தியானம், யோகப்பயிற்சி செய்வதற்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் அணையாஜோதி விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இத்திருக்கோயிலின் தெற்குப்பாகத்தில் ஒரே பீடத்தில் விநாயகர், முருகர், அய்யப்பன் அமர்ந்துள்ள சந்நதி மிகவும் புதுமையானதாகும்.
கிழக்கு வாசல் முக மண்டபத்தின் முன்புறம் நவக்கிரகங்கள், பஞ்சமுக விநாயகர், சப்தகன்னியர் ஆகியோர் சந்நிதியும் உள்ளது.
கிழக்கு வாசல் திருமதிலின் இருபுறமும் அஷ்ட லஷ்மி சுதை திருவுருவங்களும் திருநிலையின் இருபுறமும் இராஜராஜேஸ்வரியும், புவனேஸ்வரியும் முகமண்டபத்தின் மேல் விதானத்தில் வள்ளித்திருமணம், சீதா கல்யாணம், பார்வதி கல்யாணம் காட்சிகள் சுதை வடிவ சாலாஹாரமாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் நவீன முறையில் கலையம்சத்தோடு கட்டப்பட்ட இத்திருக்கோயில் எங்கும் காணமுடியாத ஒரு வளம் நிறைந்த கலைக்கூடமாகும்.