அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Kalapatti, Coimbatore - 641048, கோயம்புத்தூர் .
Arulmigu Mariyamman Temple, Kalapatti, Coimbatore - 641048, Coimbatore District [TM009821]
×
Temple History
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் மைசூர் ராஜ்யத்தில் வான் பொய்த்து வளம் ஒழிந்து பஞ்சம் தோன்றியது. இந்நிலையில் அவ்விடம் வாழ் ஒக்கிலிய கவுண்டர் மக்கள் இடம் பெயர முடிவு செய்தனர். ஆனால் எங்கு செல்வது என தீர்மானிக்க இயலாமல் திகைத்தனர் அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து அவர்களால் வணங்கப்படும் குலதெய்வம் மாரியம்மன் பிரசன்னமானாள் கன்னிப்பெண் மூலம் அருள்பாலித்த அம்மனை மக்கள் சூழ்ந்து வணங்கி தங்கள் இன்னலை எடுத்தியம்பி வாழும் வழி கேட்டனர். அம்மனின் அருள்வாக்கின்படி தென்திசை நோக்கி பயணிக்க தீர்மானித்தனர். லிங்க வடிவிலேயே இருந்த மாரியம்மன் திருமேனியை மூங்கில் கூடை ஒன்றில் வைத்துக் கொண்டு புறப்பட்டனர்.
இவ்வாறு பல நாட்கள் பயணத்தினிடையே ஒருநாள் காளப்பட்டி என்று தற்போது...முன்பு ஒரு காலத்தில் மைசூர் ராஜ்யத்தில் வான் பொய்த்து வளம் ஒழிந்து பஞ்சம் தோன்றியது. இந்நிலையில் அவ்விடம் வாழ் ஒக்கிலிய கவுண்டர் மக்கள் இடம் பெயர முடிவு செய்தனர். ஆனால் எங்கு செல்வது என தீர்மானிக்க இயலாமல் திகைத்தனர் அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து அவர்களால் வணங்கப்படும் குலதெய்வம் மாரியம்மன் பிரசன்னமானாள் கன்னிப்பெண் மூலம் அருள்பாலித்த அம்மனை மக்கள் சூழ்ந்து வணங்கி தங்கள் இன்னலை எடுத்தியம்பி வாழும் வழி கேட்டனர். அம்மனின் அருள்வாக்கின்படி தென்திசை நோக்கி பயணிக்க தீர்மானித்தனர். லிங்க வடிவிலேயே இருந்த மாரியம்மன் திருமேனியை மூங்கில் கூடை ஒன்றில் வைத்துக் கொண்டு புறப்பட்டனர்.
இவ்வாறு பல நாட்கள் பயணத்தினிடையே ஒருநாள் காளப்பட்டி என்று தற்போது வழங்கப்படும் இவ்வூரில் இரவு தங்கினர். அதிகாலையில் எழுந்து பயணத்தை துவங்கிய போது மீண்டும் அம்மன் பிரசன்னமானாள், கன்னிப் பெண் மூலம் அருள்வாக்கு தந்த அம்மன் தான் அங்கேயே குடிகொள்வதாகவும் அம்மக்கள் தம் பயணத்தை தொடரும்படியும் ஆணையிட்டாள். அம்மன் ஆணைபடியே அப்பெருமக்கள் அம்மனை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு மேற்கு திசை நோக்கி பிராயணம் செய்தனர். நாட்கள் கடந்தன அப்போது வழியாம்பாளையம் என்ற ஊரில் காளப்பநாயக்கன் என்பவரின் கனவில் அம்மன் தோன்றி தான் இருக்கும் இடம் குறித்து சில குறிப்புகளை தெரிவித்தாள். காலையில் கண்விழித்த காளப்பநாயக்கன் கனவினை உணர்ந்து, அம்மன் கூறிய இடத்தைச் தேடிச்சென்றார். பெரும் முயற்சியில் அம்மன் கூறிய இடத்தைக் கண்டறிந்தார். அந்த இடத்தை சீர்படுத்தி அம்மனை அங்கேயே ஒரு கொட்டகை அமைத்து எழுந்தருளச் செய்து வணங்கி வரலானார். லிங்க வடிவிலேயே மாரியம்மன் காளப்பட்டியில் காட்சி தருகிறாள்.
சிலகாலம் கடந்தது. காளப்பட்டி வாழ் கருப்ப கவுண்டர் என்பவரது கனவில் வந்து அம்மன் தனக்கோர் ஆலயம் அமைக்க ஆணையிட்டாள். அதன்படி ஆலயம் அமைக்கப்பட்டு மக்கள் திரளாக வந்து வழிபட்டனர். இத்திருக்கோயிலுக்கு மைசூர் அரசர்கள் பூஜா மானியமாக ஏக்கர் 5.44 ஏக்கர்/சென்ட் வழங்கினர். அதைக் கொண்டு மரபுகள்படி பூசாரியால் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர நந்தவனம், ஆலயம் உள்பகுதி, உபகோயில் உள்ள பகுதியாவும் சேர்த்து ஏக்கர் 8.34 நிலம் உள்ளது. தினசரி இரண்டு காலம் பூஜைகள் நடைபெறுகின்றன.