


தல வரலாறு
அமைவிடம்: கு.வடமதுரை (துடியலூர் அருகில்), கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம். மூலவர் : அருள்மிகு விருந்தீஸ்வரர் அம்பிகை : அருள்மிகு விஸ்வ நாயகியம்:(0)மன் மூர்த்தி: சுயம்பு தல விருச்சம் : முருங்கை தீர்த்தம் : சிவதீர்த்தம் ( தல வரலாறு) தலசிறப்பு: சுந்திரமூர்த்தி நாயனார் பாடப் பெற்றதாக போற்றப்படுகிறது. (வைப்பு தலம்) ஸ்தல சிறப்பு 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் அகத்தியர் சுந்தரர் கந்தமாமுனி குருவவருடி பூஜித்த திருத்தலம். சுந்தரருக்கு இறைவனே தொண்டனாக உருவெடுத்து முருங்கைக்கீரை சமைத்து விருந்தளித்தார். இறைவன் சுயம்பு மூர்த்தி...அமைவிடம்: கு.வடமதுரை (துடியலூர் அருகில்), கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம். மூலவர் : அருள்மிகு விருந்தீஸ்வரர் அம்பிகை : அருள்மிகு விஸ்வ நாயகியம்:(0)மன் மூர்த்தி: சுயம்பு தல விருச்சம் : முருங்கை தீர்த்தம் : சிவதீர்த்தம் ( தல வரலாறு) தலசிறப்பு: சுந்திரமூர்த்தி நாயனார் பாடப் பெற்றதாக போற்றப்படுகிறது. (வைப்பு தலம்) ஸ்தல சிறப்பு 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் அகத்தியர் சுந்தரர் கந்தமாமுனி குருவவருடி பூஜித்த திருத்தலம். சுந்தரருக்கு இறைவனே தொண்டனாக உருவெடுத்து முருங்கைக்கீரை சமைத்து விருந்தளித்தார். இறைவன் சுயம்பு மூர்த்தி கல்வெட்டுகள்: 7 இடங்களில் உள்ளன. திருக்கோயில் இருப்பிடமும் அமைப்பும் கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், குருடம்பாளையம் கிராமம், வடமதுரை, (துடியலூர் அருகில்) அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் வடக்கு மேட்டுப்பாளையம் சாலையில் கோயம்புத்தூரிலிருந்து 11 கி.மி தொலைவில் துடியலூருக்கு அடுத்து பிரதான சாலையை ஒட்டி வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகில் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து நகர பேருந்துகளும், விரைவு பேருந்துகளும் அடிக்கடி உள்ளன. சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் அருள்மிகு விருந்தீஸ்வரர் எழுந்திருளி பக்தர்களுக்கு கேட்ட வரம் தந்து அருள்பாலித்து வருகிறார். பெயர்க்காரணம் கோவை மாநகரில் மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. மலையின் ஒரு பகுதியில் குருரிஷி (குருவ வருடி) மலையுள்ளது. இங்கு வசித்த குரு ரிசி என்ற முனிவர் இறைவனை தரிசிக்கும் பொருட்டு இத்திருத்தலத்திற்கு வந்து துடிசை எனும் முரசு வாத்தியத்தை இசைத்து தரிசனம் செய்தமையால் இவ்வூருக்கு திருத்துடிசையம்பதி எனவும் இத்திருக்கோயிலுக்கு வடக்கே மதுர நதி அமைந்துள்ளதால் வடமதுரை என்ற பெயரும் ஏற்பட்டது. தல வரலாறு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் ஊரின் நடுவில் கோவை மேட்டுப்பாளையம் பிரதான சாலையை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விருந்தீஸ்வரர் கருவறையில் இயற்கையாய் அமைந்த சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அக்காலத்தில் நாயன்மார்கள் ஒவ்வொரு சிவதலத்திற்கும் சென்று இறைவனை வழிபட்டு வந்தனர். 7ம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார் ஒவ்வொரு சிவ திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் எழுந்தருளியிருக்கும் அவிநாசிலிங்கேஸ்வரரையும், கருணாம்பிகை தாயாரையும் தரிசித்து விட்டு அன்று இரவு அங்கு தங்கி விட்டு மறு நாள் திருத்துடிசையம் பதியை நோக்கி வந்தார். கோவிலை அடையும் முன்பே பசியால் சோர்வடைந்து தள்ளாடியபடி கோயிலை அடைந்தார். பசியுடன் துவண்டிருந்த அவரை வேட்டுவ தம்பதி இரு கரம் கூப்பி எதிர் கொண்டு அழைத்தனர். பசியால் உடல் வாட்டமுற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கணவன் விசிறி கொண்டு வீச மனைவி அருகில் நின்றிருந்த முருங்கை மர இலைகளைப் பறித்து அமுது படைத்தார். இதனால் பசியால் வாடிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு புத்தொளி பிறந்தது. சுந்தரமூர்த்தி நாயனருக்கு விருந்து அமுது படைத்த வேட்டுவ தம்பதி ஈசன் சிவபெருமானும் அம்பாள் பார்வதியும் தான். முருங்கைக் கீரையை சமைத்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருந்து படைத்ததால் ஈசன் விருந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் இக்கோவிலை நிறுவி உள்ளார். கோவில் கருவறையின் சுற்றுப்புற சுவரில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோயில் எனத் தெரிய வருகிறது. சுயம்பு மூர்த்தி கருவறையில உள்ள ஈசன் இயற்கையாய் அமைந்த சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு கண்ணில் நீர் மல்கி நெஞ்சுருக பிரார்த்தனை செய்தால் நிறைவேறாத வேண்டுதலே கிடையாது என்பது பக்தர்களின் எண்ணம் இங்கே குடிகொண்டுள்ள இறைவன் எல்லையில்லா வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார். அதிகார நந்தி ஈசனின் பிரதான சன்னதியின் முன்பு அதிகார நந்தி அழகாய் அனைவருக்கும் அருள்பாலிக்கிறார். நந்தியெம் பெருமானுக்கு நான்கு தூண்கள் உடைய அழகிய விமானம் அமைந்துள்ளது. மிகுந்த வேலைப்பாடு உடைய விமானம் கிழக்கில் சிவபெருமானும் தெற்கில் ஆலமர் செல்வர் மேற்கில் திருமால் வடக்கில் பிரம்மா என சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்துள்ளது. சர்வமும் ஈசனது ஆணைக்குட்பட்டது. அப்படி அவனுடைய ஆணைக்குட்பட்ட எல்லா இடத்திலும் அதிகாரம் செலுத்தும் அதிகாரத்தை ஈசன் நந்தி யெம் பெருமானுக்கு வழங்கினார். ஆகவே அதிகார நந்தி என்று அழைக்கப்படுவதோடு ஈசனோடு சேர்த்து வழிபடக்கூடிய பெருமையையும் பெற்றார். நந்தி கேஸ்வரர் சிவனை வழிபடுவதற்கு முன் இவரை வணங்கி விட்டு இவரது அனுமதியுடன் சிவனை வணங்கினால் தான் முழு பலன் கிடைக்கும். இத்தலத்தில் கந்தமா முனிவர் பிரதோச பூஜை செய்து பேறு பெற்றார் என போற்றப்படுகிறது. இந்த அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்தால் அவரும் குளிர்ந்து நமக்கு வேண்டியதைக் கொடுத்து நம்மையும் குளிர்விப்பார். நுழைவாயிலில் நந்தி யெம் பெருமானுக்கு நேராக பலி பீடமும் உள்ளது. நடராஜர் பொதுவாக எல்லா சிவலாயங்களிலும் நடராஜர் ருத்ர தாண்டவ கோலத்திலே தலைமுடி விரித்த கோலத்தில் இடது கை உயர்த்தியவாறும், இடது திருக்கரம் இடது திருவடியை நோக்கியே நடனமாடி அருள்பாலிப்பார். ஆனால் இத்திருத்தலத்திலோ தலைமுடி அழகாக பின்புறம் வீழ்ந்து சாந்த சொருபியாக திருக்கரம் பக்தரை அரவணைக்கும் கோலத்தில் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். இலட்சுமி நாராயணர் 14 நூற்றூண்டுகள் பழமையான பெருமாள் இங்கு லட்சுமி நாராயணராக அருள் பாலிப்பதைப் பார்த்து கொண்டே இருக்கலாம். கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர்கள் இங்கு வந்து இலட்சுமியோடு இணைந்து காட்சி தரும் நாராயணரை வணங்கினால் கருத்து வேறுபாடுகள் நீங்கி செல்வம் பல பெற்று இன்பம் அடையவார்கள் என்பது திண்ணம். அருள் வழங்கும் ஆஞ்சநேயர் பெருமாளுக்கு மட்டுமே பணிந்திடும் வைராக்கியம் கொண்ட ஆஞ்சநேயர் வீரம் செறிந்த தோளோடும் கரங்களோடும் பக்தர்களை பார்த்து யாமிருக்க பயம் எதற்கு என்று அபயம் அருளிய வண்ணம் காட்சி தருகிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் அவர் திருமேனியில் வெண்ணெய் காப்பு செய்து வடைமாலை சார்த்தி வழிபட்டால் விதி வசத்தால் சூழ்ந்த பீடைகளும் பயமும் விலகி லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. தற்பொழுது திருப்பணிக்காக பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ளது. விசுவநாயகி அம்மன் (உரு பெரு அழகியார்) சுந்தரருக்கு விருந்திட்ட ஜோதியம் பெருமான் விருந்தீஸ்வரருக்கு வடப்புறத்தில் சன்னதியில் வீற்றுள்ள அம்மனின் வடிவம் விசுவரூபம் கொண்டிருக்கிறது. அதனால் அம்பாளுக்கு விசுவநாயகி அம்மன் ( உருபெரு அழகியார்) எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் இடையில் உள்ள சன்னதியில் பாலமுருகன் பிணி தீர்க்கும் பிள்ளையாய் கோயில் கொண்டிருக்கிறார். இவர் திருவடி தொழுது வணங்கிவேருக்கு வெற்றி மீது வெற்றி வந்து குவிந்த வண்ணம் விளங்குமென தலவரலாற்றில் அருணகிநாதரால் பாடல் பெற்ற திருபுகழ் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் சனிபகவானுக்கு தனியே சன்னதி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். சனிபகவானுக்கு பரிகாரங்கள் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என்றால் மிகை இல்லை. நவகிரகங்களும் சேர்ந்து மற்றொரு சன்னதி இங்கே அமைந்திருப்பது இன்னும் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் அருள்மிகு விநாயகர், சூரியபகவான், சந்திரன், தட்சணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் மங்கல வாழ்வுதனை அள்ளித்தரும் துர்க்கை ஆகிய பரிவார தெய்வங்கள் தனித்தனி துணை சன்னதிகளிலிருந்து அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலில் சுவாமி புறப்பாட்டின் போது திருக்கோயிலுக்கு வெளியில் அருள்பாலித்தி வரும் அரசமரத்தடி விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு திருவீதி உலா துவங்கி விநாயகரை சுற்றி வந்தபின் திருவீதி உலா நடைபெறும். இந்த அரசமரத்தடியில் அருள்பாலித்து வரும் விநாயகரை வழிபட்டு பின்பு திருக்கோவிலுக்குள் நுழைந்ததும் கைலாயத்திற்குள் சென்றது போன்ற ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. முதலில் மூலவர் எம்பெருமானை தரிசித்து விட்டு அவரின் முன்னாள் உள்ள அதிகார நந்தியை வழிபட வேண்டும். பின்னர் ஒவ்வொரு தெய்வங்களையும் வழிபட வேண்டும். பெண்கள் மங்கள வாழ்வு பெறவும் கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகவும் துர்க்கையம்மன் எழிலுற அமர்ந்து அருள்பாலிக்கிறார். துர்க்கையம்மனுக்கு முன்பு செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பெண்கள் எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அருள்மிகு விருந்தீஸ்சுவரர் திருக்கோயில் ஊரின் நடுவில் கோவை மேட்டுப்பாளையம் பிரதான சாலையை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்னே அழகிய திருவாயில் அமைந்துள்ளது. ஒரே பிரகாரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் விருந்தீஸ்வரர் கிழக்கு பார்த்து அமைந்துள்ளார். தென்மேற்கு நிருதி விநாயகர் மேல் நிலை நீர் தொட்டி மேற்கில் தல விருட்சம் முருங்கை மரம் அடுத்து மூலவருக்கு வடக்கில் அருள்மிகு பாலசுப்பிரமணியரின் சன்னதி அடுத்து அருள்மிகு விசவ நாயகி அம்மன் சன்னதி அடுத்து இலட்சுமி நாராயணர் சன்னதி, மூலவர் கோமுகி அருகில் சண்டிகேசுவரர் சன்னதி, மூலவர் கோயில் வலதுபுறம் சூரியன் சன்னதி இடதுபுறம் சந்திரன் சன்னதி தென்கிழக்கில் மடப்பள்ளி வடகிழக்கில் பைரவர், நவகிரக சன்னதி சனீசுவரர் சன்னதி வடகிழக்கு மூலையில் வாகன அறை மற்றும் மூலவர் கோயில் ஒட்டியவாறு தெற்கு நோக்கி கனக சபை அமைந்துள்ளது.
