திருக்கோயில் ஸ்தல வரலாறு
இத்திருக்கோயில் கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டத்தில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் பெரியநாயக்கன்பாளையம் அருகில் நெ.2 கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுவினால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் ஓலை குடிசையாக இத்திருக்கோயில் எழுப்பப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திருக்கோயிலில் அம்மன் நிலை கொண்டிருந்தபொழுது, திருக்கோயிலின் வழியாக வளையல் வியாபாரி ஒருவர் வியாபாரத்திற்காக அவ்வழியே வந்ததாகவும், மேற்படி வியாபாரியினை நோக்கி தான் வஞ்சியம்மன் என்ற பெயரில் உள்ளதனையும், தனக்கு வளையல் அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் மேற்படி வளையல் வியாபாரியினால் இச்செய்தி பிறருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளது செவிவழி செய்தியாகும். அதன் பின்னர் அனைத்து...திருக்கோயில் ஸ்தல வரலாறு
இத்திருக்கோயில் கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டத்தில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் பெரியநாயக்கன்பாளையம் அருகில் நெ.2 கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுவினால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் ஓலை குடிசையாக இத்திருக்கோயில் எழுப்பப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திருக்கோயிலில் அம்மன் நிலை கொண்டிருந்தபொழுது, திருக்கோயிலின் வழியாக வளையல் வியாபாரி ஒருவர் வியாபாரத்திற்காக அவ்வழியே வந்ததாகவும், மேற்படி வியாபாரியினை நோக்கி தான் வஞ்சியம்மன் என்ற பெயரில் உள்ளதனையும், தனக்கு வளையல் அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் மேற்படி வளையல் வியாபாரியினால் இச்செய்தி பிறருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளது செவிவழி செய்தியாகும். அதன் பின்னர் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி அம்மனுக்கு மூலஸ்தானம் எழுப்பி கற்சிலை மூலம் ஆகம விதிப்படி வழிபாடு செய்து வருகின்றனர்.
இத்திருக்கோயிலில் விநாயகர் சன்னதி, கல்யாண சுப்ரமணியர் சன்னதி, நவகிரக சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கருப்பராயர் சன்னதி முதலியவை அமைந்துள்ளது. திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியமின்மை, பில்லி சூன்யம், ராகு,கேது நீக்குதல் போன்றவை நிவர்த்திக்கான பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்திய ஐந்து வெள்ளிக்கிழமைகள் சித்திரை1, தைப்பூசம், அமாவாசை போன்ற நாட்களில் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினசரி காலை 9.00 மணி மதியம் 12.00 மணி மாலை 6.00 மணி மூன்று வேலைகளில் நித்யப்படி பூஜை நடைபெற்று வருகிறது.
முக்கிய விழாக்கள்
ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், நவராத்திரி, தீபாவளி திருநாள், கார்த்திகை தீபம் முதலியன.