திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் & வட்டம் அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி & வீரராகவப் பெருமாள் திருக்கோயிலானது சட்டப்பிரிவு 46 (3) -ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஓர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் தினசரி சுமார் 450 நபர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் சுமார் 1000 நபர்கள் கலந்து கொள்வார்கள்.இத்திருக்கோயிலில் அன்னதான திட்டமானது மதியம் சுமார் 12.00 மணியளவில் தமிழக அரசின் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது.இதில் 50 நபர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 80 (G) -ன் கீழ் இரசீது வழங்கப்பட்டு வருகிறது.