காஞ்சி மாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞானவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த அர்ச்சுனன் முதலியோர் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோவில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும்...