அன்னதானம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 30 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 60 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், மோர், ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12 மணி முதல் 2.00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (அன்னதானம், அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், கண்ணம்பள்ளி) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.