அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126, திருப்பூர் .
Arulmigu Mariamman Temple, Udumalpettai, Udumalpettai - 642126, Tiruppur District [TM010059]
×
Temple History
தல வரலாறு
திகைப்பூட்டும் வளமும், திரும்பக்கேட்கத் தோன்றும் மகத்துவமும், திரும்பிப்பார்க்கத் துhண்டும் அற்புதமும் நிறைந்த திருப்பூரின் தென்திசைக்கே உரித்தான மெஞ்ஞானமும், வித்யாகலையும் விளையும் பண்டையப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டதுமான சக்ரகிரிதுர்க்கம் எனும் `உடுமலைப்பேட்டை` சரித்திரச்சான்றுகளும், அறச்செயல்களும் மலிந்த குறிஞ்சி, முல்லை, மருதமாகிய மூவகை நில வளமும் நிறையப்பெற்ற பூமியாகும்.
ஊர் வளமிக்க உடுமலைப்பேட்டை மாநகரின் மையப்பகுதியில் பெருங்கோயில் கண்டு நீர்வளம், நிலவளம், சீர்வளம், செல்வவளம் என நால் வகை வளமும் குறைவு படாது தந்து, தீராத நோய்களையும், வினைகளையும் வேஈறுத்து, வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈந்து, தாயுள்ளத்தோடு நலம், பலம் பல தந்து, கண்போல் காத்தருளும் கருணைமிகு மாரியம்மனின் அருளிச் செயல்களின் அற்புதங்கள் அதிசயம் அநேக முற்றவைகளாகும்.
வருடம் தோறும் பங்குனி வளர்பிறை முதல் செவ்வாய் அன்று...திகைப்பூட்டும் வளமும், திரும்பக்கேட்கத் தோன்றும் மகத்துவமும், திரும்பிப்பார்க்கத் துhண்டும் அற்புதமும் நிறைந்த திருப்பூரின் தென்திசைக்கே உரித்தான மெஞ்ஞானமும், வித்யாகலையும் விளையும் பண்டையப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டதுமான சக்ரகிரிதுர்க்கம் எனும் `உடுமலைப்பேட்டை` சரித்திரச்சான்றுகளும், அறச்செயல்களும் மலிந்த குறிஞ்சி, முல்லை, மருதமாகிய மூவகை நில வளமும் நிறையப்பெற்ற பூமியாகும்.
ஊர் வளமிக்க உடுமலைப்பேட்டை மாநகரின் மையப்பகுதியில் பெருங்கோயில் கண்டு நீர்வளம், நிலவளம், சீர்வளம், செல்வவளம் என நால் வகை வளமும் குறைவு படாது தந்து, தீராத நோய்களையும், வினைகளையும் வேஈறுத்து, வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈந்து, தாயுள்ளத்தோடு நலம், பலம் பல தந்து, கண்போல் காத்தருளும் கருணைமிகு மாரியம்மனின் அருளிச் செயல்களின் அற்புதங்கள் அதிசயம் அநேக முற்றவைகளாகும்.
வருடம் தோறும் பங்குனி வளர்பிறை முதல் செவ்வாய் அன்று நோன்பு சாற்றி, கொடியேற்றத்துடன் தொடங்கும் மகோத்ஸவ விழாவில் தினசரி திருவீதி உலா, பூவோடு, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், திருக்கல்யாணம், தேரோட்டம், பரிவேட்டை, மஞ்சள்நீராட்டு என ஊரே களைகட்டும்! 72 கிராமங்களும் ஒன்று கூடும்! மகத்தினில் உதித்த மாதரசி, மகிமை வளர் மாரியம்மனைத் தரிசித்து நலமுறை வாழ்வோம்.
இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு மாரியம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியன வேண்டியவை தந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் அருள்மிகு சக்திவிநாயகர் சன்னதியும், வடமேற்கு பகுதியில் அருள்மிகு செல்வமுத்துக்குமரன் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலானது பொள்ளாச்சி - பழனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது.
தல பெருமை
உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பிரஸ்தி பெற்ற திருக்கோயில் ஆகும்உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பிரஸ்தி பெற்ற திருக்கோயில் ஆகும்
இலக்கிய பின்புலம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உடுமலை நகர் மற்றும் வட்டம்அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உடுமலை நகர் மற்றும் வட்டம்