திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் நகரில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் 72 கிராமங்களிக்கு உரித்தான திருக்கோயிலாகும். மேலும் திருக்கோயிலுக்கு பங்குனி மாதத்தில் கம்பம் நட்டு காப்பு கட்டி பூவோடு வைத்து 15 நாட்கள் சாட்டப்பட்டு தினமும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் 72 கிராம மக்களுக்கு அருள் பாளிப்பார் இறுதி வியாழக்கிழமையில் ஊர் மக்களால் தேர் திருவிழா விமர்சியாக நடைபெறும். இவ்வாறு வருடவருடம் தேர் திருவிழா நடை பெறுவதால் பருவ மழை தவறாமல் பெய்து ஊர் செழிப்புடனும் வளமுடனும் மக்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.