அருள்மிகு ஆகாசராயர் திருக்கோயில், அவிநாசி, அவிநாசி - 641654, திருப்பூர் .
Arulmigu Agasarayar Temple, Velayuthampalayam, Avinashi - 641654, Tiruppur District [TM010085]
×
Temple History
தல வரலாறு
ராயர்களில், 1) ஆகாசராயர்
2) கருப்பராயர்
3) செங்காளிராயர்
4) உத்தண்டராயர்
5) வீரராயர்
6) சங்கிலிக் கருப்பண்ணராயர்
7) மலை காத்தராயர் (ஆதிவாசிகள் வழிபடும் தெய்வம்)
8) ஆனந்த சிவக்கூத்தராயர்
ஆகிய எட்டு ராயர்களில் முதன்மையான ஆகாசராயர் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்புடையதாகும்,
இச்சிறப்பு வாய்ந்த ஆகாசராயர் உலகம் அழியும் காலத்தில் சுவாமி எழுந்தருளிய காலத்தால் நவக்கிரகங்களைத் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவர் ஆகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தைப் பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் ஈசனின் அம்சமாகிறார். அவ்வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாகிறார்.
பிரம்மச்சாரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும் பரிகாரம் செய்யக்கூடிய வல்லமை புரிகிறார். சுவாமி அஷ்ட திக்கும் ஆகாசமும் பலம் பொருந்திய பாலகன் ஸ்ரீ ஆகாசராயர் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார்.
இத்திருக்கோயில் அஷ்டமச் சனி, ஏழரைச்...ராயர்களில், 1) ஆகாசராயர்
2) கருப்பராயர்
3) செங்காளிராயர்
4) உத்தண்டராயர்
5) வீரராயர்
6) சங்கிலிக் கருப்பண்ணராயர்
7) மலை காத்தராயர் (ஆதிவாசிகள் வழிபடும் தெய்வம்)
8) ஆனந்த சிவக்கூத்தராயர்
ஆகிய எட்டு ராயர்களில் முதன்மையான ஆகாசராயர் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்புடையதாகும்,
இச்சிறப்பு வாய்ந்த ஆகாசராயர் உலகம் அழியும் காலத்தில் சுவாமி எழுந்தருளிய காலத்தால் நவக்கிரகங்களைத் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவர் ஆகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தைப் பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் ஈசனின் அம்சமாகிறார். அவ்வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாகிறார்.
பிரம்மச்சாரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும் பரிகாரம் செய்யக்கூடிய வல்லமை புரிகிறார். சுவாமி அஷ்ட திக்கும் ஆகாசமும் பலம் பொருந்திய பாலகன் ஸ்ரீ ஆகாசராயர் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார்.
இத்திருக்கோயில் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டுனீர், ஏகனீர் மற்றும் செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள் அனைவரும், ராகு கேது தோஷமுள்ள அனைவரும் தாயத்து வாங்கி சுவாமியின் அனுக்கிரத்தைப் பெற்று, 16 செல்வங்களையும் (உங்களின் பிறவிப் பயன் எதுவோ அதற்கு உண்டான செல்வத்தை) இறைவனுடைய அனுக்கிரகத்தால் பக்தர்கள் பெற்று இன்புற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.