தல வரலாறு

தாராபுரம் வட்டம் பட்டுத்துறைகிராமத்தின் அருகில் குன்றுகள் சூழ்ந்துள்ள பகுதியில் மரங்களுக்கு நடுவே காட்டுபகுதியில் புளிய மரத்தின் அடியில் புற்றுமண் வடிவில் மலையாள தன்னாசி கருப்பண்ணசாமி எழுந்தருளியுள்ளார். நோய் நொடிகள் கட்டி கொப்பளங்கள் உருவனவர்களுக்கு எண்ணெய் வைத்து வழப்பட்டு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது தீராத நோய் உள்ளவர்களுக்கு எண்ணெய் வைத்து வழிப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் வைகாசி மாதம் அக்னி உற்சவத்தின்போது கொடுமுடி சென்று தீா்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு தீா்த்தம் செலுத்தி வழிப்பட்டு வருகின்றனர்.