அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், Near Amaravathi River, Dharapuram - 638656, திருப்பூர் .
Arulmigu Agathiswarar Temple, Near Amaravathi River, Dharapuram - 638656, Tiruppur District [TM010114]
×
Temple History
தல வரலாறு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் நகர் அமராவதி நதிகரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அகஸ்தியரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஒன்றாகும்.
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை செய்து முடித்த பின்பே பயணம் மேற்கொள்வார். அவ்வாறு பயணம் செய்கையில் தாராபுரம் அமராவதி நதியில் குளித்துவிட்டு சிவபூஜைக்காக சிவ லிங்கத்தை எடுத்துவைத்து பூஜிக்க தேவர்களை அழைத்து சிவலிங்கத்தை எடுத்தவர சொன்னபொழுது சிவ லிங்கத்தை காசியிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினர். உடனே. அவர்களை போய் காசியிலிருக்கும் சிவலிங்கத்தை...திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் நகர் அமராவதி நதிகரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அகஸ்தியரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஒன்றாகும்.
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை செய்து முடித்த பின்பே பயணம் மேற்கொள்வார். அவ்வாறு பயணம் செய்கையில் தாராபுரம் அமராவதி நதியில் குளித்துவிட்டு சிவபூஜைக்காக சிவ லிங்கத்தை எடுத்துவைத்து பூஜிக்க தேவர்களை அழைத்து சிவலிங்கத்தை எடுத்தவர சொன்னபொழுது சிவ லிங்கத்தை காசியிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினர். உடனே. அவர்களை போய் காசியிலிருக்கும் சிவலிங்கத்தை எடுத்துவர சொன்னார் அவ்வாறு சென்றவர்கள் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை. உடனே அகஸ்தியர் ஆற்று மணலெடுத்து இருகைகளால் கூப்பி வைத்து பூஜித்தார். பூஜை முடிவுற்றதும் தேவர்கள் சிவ லிங்கத்தை கொண்டு வந்துள்ளதை தெரிவித்தனர். அப்பொழுது அகஸ்தியர் தான் மணலாள் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜையை முடித்து விட்டேன். அதனையே கோவிலில் வைத்து பூஜிக்கட்டும் தற்போது காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை தனியே மற்றொரு சன்னதியில் வைத்த அதனை காசிவிஸ்வநாதர் என குறிப்பிட்டு பூஜிக்கவேண்டும் என குறிப்பிட்டு சென்றார் அந்த நாளிலிருந்து அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விங்கத்தை அகஸ்தீஸ்வரர் என்றும் காசியிலிருந்து எடுத்து வந்த லிங்கத்தை காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கப்பட்டு பூஜைகள் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது.
ஆதியில் இவ்வாறு சிவபூஜை தாமதமாக நடைபெற்றதால் தற்போதும் இத்திருக்கோவிலில் எந்த பூஜை திருமணம் முதலான எந்த ஒரு காரியங்களும் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்பட வேண்டும். என உரிய ஏற்பாடுகள் செய்துவைத்தாலும் தாமத்துடன் தான் நடைபெறுகிறது
மேலும் இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் கார்த்திகை ஜோதி, அன்னாபிஷேகம் சித்ரா பௌர்ணமி. ஆடி 18 முதலான வருட உற்சவங்களும் பிரதோஷம், கிருத்திகை முதலான மாத உற்சவங்களும் நடைபெறகிறது. இத்திருக்கோவிலில் சிவ ஆகம முறைப்படி தினசரி இருகாலபூஜை நடைபெறுகிறது.
இத்திருகோயிலில் வினாயகர் சன்னதி, காசி விஸ்வநாதர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி சன்னதி, தண்டாயுதபாணி சன்னதி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், சூரியன், நவக்கிரங்கள், மற்றும் நால்வர் முதலான சன்னதிகள் உள்ளது.