திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மற்றும் நகர் அமராவதி நதிக்கரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். திருக்கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்தபோது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது, உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு அகஸ்தியருக்கு சிவபெருமான் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில் அகஸ்தியர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்படி இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர் இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். தேவர்களை அழைத்து காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறினார். அவ்வாறு சென்றவர்கள் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை. உடனே அகஸ்தியர் ஆற்று...