ஈரோட்டில் பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில் என மூன்று மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளன. இங்கு பெரிய மாரியம்மன் வடக்கு முகமாகவும், மற்ற இரண்டு மாரியம்மன் கிழக்கு முகமாகவும் உள்ளது. ஈரோடு மாநகரின் முக்கிய பிரதான சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை உள்ளது. சற்றுப்பின்னப்பட்ட சிலை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். புராண...ஈரோட்டில் பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில் என மூன்று மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளன. இங்கு பெரிய மாரியம்மன் வடக்கு முகமாகவும், மற்ற இரண்டு மாரியம்மன் கிழக்கு முகமாகவும் உள்ளது. ஈரோடு மாநகரின் முக்கிய பிரதான சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை உள்ளது. சற்றுப்பின்னப்பட்ட சிலை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். புராண ஐதீகப்படி தாய்க்கு எடுக்கப்பட்ட கோயிலில் பரசுராமன் சிலை இருப்பது மிகப் பொருத்தமும் சிறப்பும் உடையதாகும். திருமாலின் தசாவதாரங்களில் ஒன்று பரசுராம அவதாரமாகும்.
சங்க இலக்கியத்தில் பரசுராமன் வழிபாடு கூறப்படுகிறது. தன் தந்தை சமதக்கினி முனிவரை கார்த்தவீரியார்ச்சுனன் என்ற அரசன் கொன்றதால் அரசர்களை 21 தலைமுறை கொன்று மகிழ்ந்தவன் பரசுராமன், கேரள நாட்டைப் பரசுராமன் நாடு என்பர். காஞ்சிப்புராணத்திலும், சிவப்புராணத்திலும் பரசுராமனைப் பற்றிய பல செய்திகள் கூறப்படுகின்றன. பரசுராமன் சிலை பெரிய மாரியம்மன் கோயிலில் இருப்பது சிறப்புமிக்கதாகும்.
மேற்கு பிரகாரத்தில் பட்டாலம்மன் எழுந்தருளியுள்ளார். பங்குனி மாத திருவிழா கம்பம் நடுமுன் முதல் பூஜை பட்டாலம்மனுக்குத் தான் நடைபெறும் இதுவே மிகச்சிறப்பாகும்.
அருள்மிகு பெரிய மாரியம்மன் பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர் 45 வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்து வணங்கி மகப்பேறு அடைகின்றனர் என்பது சிறப்பு. அம்மை நோய் வராமல் மாரியம்மன் அருள்பாலிக்கின்றார். நோய் வந்தோர்க்கு விரைவில் சுகம் அளிக்கிறார்.